‘தர்மபிரபு’ மற்றும் ‘கூர்க்கா’வின் வெற்றியைத் தொடர்ந்து யோகிபாபு நாயகனாகும் படம் ‘காதல் மோதல் 50 /50’ விரைவில் வெளியாகவிருக்கிறது. ஆக்ஷன் கலந்த பேய்ப்படமாம் இது.
தரண்குமார் இசை அமைக்க, பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.
அஜித், விஜய்யின் படங்கள் எப்படி இருக்கின்றனவோ அது அடுத்த விஷயம். ஆனால், ஆவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து படங்கள் வெளியாவது வரை அப்டேட்டுகளும், தொடர் விவாதங்களும் அலப்பறையாக நடக்கும்.
அஜித் படமான ‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகிவிட, இப்போது விஜய்யின் முறை. அவர் அட்லி இயக்கத்தில் இப்போது நடித்து வரும் ‘பிகில்’ கடைசிக்கட்டத்துக்கு வந்துவிட, அடுத்த படத்தைப் பற்றிய செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
அப்படி அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படம் ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…
Read More
இந்தப்படம் காலத்தின் கட்டாயம் எனலாம். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்கும் படங்கள் பல வந்துள்ளன. அதில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதற்கு முதன்மையான காரணம் இந்த படச் செய்தி இன்றைய நவநாகரிக உலகத்துப் பெண்களின் உரிமை பேசுகிறது.
பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் இன்ன உடை உடுத்த வேண்டும். பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ள வேண்டும். இரவில் வெளியே சுற்றாமல் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். அவளுக்கென்று உடற்கூறுகள் இருக்கின்றன. அதனால்…
Read More
சில தினங்களுக்கு முன்பு டார் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பல மொழிகளில் படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
விஜய்சேதுபதி தன் வேடத்தில் நடிப்பது குறித்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் பலரும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். காரணம் முரளிதரன் தமிழராக இருந்த போதும்…
Read More
அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன். சதீஷ் கர்ணாவும் படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குனர் என்றும் பெயர் போட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு…
Read More
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . ‘கார்த்தி19’ என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி.
கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான கதையில்…
Read More