August 14, 2026
  • August 14, 2026
Breaking News

Currently browsing அரசியல்

உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது..!

by by Aug 13, 2026 0

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கெஜட்டில் வெளியிட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தரக் கிளைகள் அமையவுள்ளன.

அதன்படி வடக்கு மண்டலத்தில் புதுடெல்லி, தெற்கு மண்டலத்தில் சென்னை, கிழக்கு மண்டலத்தில் கொல்கத்தா மற்றும் மேற்கு மண்டலத்தில் மும்பை ஆகிய இடங்களில் இந்தக் கிளைகள்…

Read More

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த இந்நாள் முதல்வர் விஜய்..!

by by May 11, 2026 0

தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (10-05-2026) பொறுப்பேற்றுக்கொண்ட சி ஜோசப் விஜய், இன்று திங்கள்கிழமை (11-05-2026) தனது முன்னோடியும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினையும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார்.

சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்று, நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் பதவியேற்றதற்கு மறு நாளிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விஜயை ஸ்டாலின் வரவேற்றார். அப்போது இரு…

Read More

அரசியலில் முற்றுப்புள்ளி என்பது கிடையாது – கமல்ஹாசன்

by by Mar 25, 2026 0

பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாகும். பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.

தமிழகத்தை மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து காக்கும் எண்ணத்தில், தமிழக மக்களின் வளர்ச்சி கருதியும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல;…

Read More

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘கலைச் சங்கமம்’ – 38 மாவட்டங்களில் ஒரே நாளில் பாரம்பரிய கலை விழா

by by Jan 16, 2026 0

தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 -ம் ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நடக மன்றம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

கலை பண்பாட்டு இயக்ககத்தின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில்…

Read More

224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்: கள நிலவரம் சிறப்பாக உள்ளது..! – பி.டி.செல்வகுமார்

by by Dec 12, 2025 0

தி.மு.க வில் இணைந்தார் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்..!

சினிமாத் துறையில் ஆளுமைமாக இருந்து, நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்தே அவருடன் பயணம் செய்துள்ளேன். விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது தொடங்கி, இரவு பகல் பார்க்காமல் விஜய் வளர்ச்சிக்காக மட்டுமே வாழ்ந்துள்ளேன். அவரது தந்தைக்கு அடுத்த நிலையில் இருந்து பணியாற்றியவன் நான். அடுத்த கட்டங்களில் அவருடன் சேர்ந்த தவறான நட்புகளால், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட குடும்ப உறவுகளையும், என் போன்றவர்களையும் புறக்கணித்து விட்டார்.

Read More

பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள் – இன்று..!

by by Nov 2, 2025 0

நவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள்:

நீதிக்கான உலகளாவிய அறைகூவல்..!

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பும் (IFJ) அதன் உலகளாவிய அங்கத்தினர்களும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாளாக அனுசரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை இந்த நினைவு நாளை அறிவித்து 12 ஆண்டுகள் ஆகியும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அச்சுறுத்தலும் வன்முறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் உடைகள் அல்லது மேலங்கியில் ‘பத்திரிகை’ என்று தெளிவாக…

Read More

சென்னை மாநகராட்சி நிறுவிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC)

by by Oct 16, 2025 0

சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC) நிறுவப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு மையம் 24 × 7 செயல்படும்.

1000+ கேமராக்கள், மழை மற்றும் வெள்ள சென்சார் கருவிகள், அவசர அழைப்பு, Wi-Fi வசதிகள், பொது அறிவிப்பு ஒலிபெருக்கிகள் என குடிமக்கள் பாதுகாப்பையும் வசதியையும் கண்காணித்து மேலாண்மை செய்யும் மக்கள் சேவைக்கான‌ வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.

Read More

எம்ஜிஆர், ஜெ வழியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன்..! – செங்கோட்டையன்

by by Sep 6, 2025 0

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், ” தர்மம் தழைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டி நேற்று கருத்தை வெளிப்படுத்தினேன்.

அதனால் கழகத்தில் இருந்து நீக்கியதற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் வேதனைப்பட…

Read More

இங்கிலாந்தில் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

by by Sep 3, 2025 0

லண்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

“இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்..!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் ரூ.7020 கோடி மதிப்பிலான முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சர்வதேச யோகா தினத்தில் 51 தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ஆர். என். ரவி

by by Jun 21, 2025 0

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொண்ட 11 வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

வேலம்மாள் கல்வி குழுமம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து 10 ஆயித்து 200 பேர் கலந்து கொண்டது மதுரையின் முதல் சாதனை.

காலை 8 மணிக்கு…

Read More