April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிக்பாஸில் கொடுமை மதுமிதா போலீஸில் திடீர் புகார்
September 4, 2019

பிக்பாஸில் கொடுமை மதுமிதா போலீஸில் திடீர் புகார்

By 0 744 Views

பிக் பாஸ் 3 சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

அத்துடன் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் ஒன்றை அளித்தது. அதில், மதுமிதா தனக்கு வர வேண்டிய பணத்தை உடனடியாக கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை அழைத்த மதுமிதா, தன் மீது விஜய் டிவியில் தனக்கு தர வேண்டிய பணத்தை குறிப்பிட்ட தேதியில் தருவதாக சொன்னார்கள், அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். பிறகு ஏன் என் மீது இப்படி பொய் புகார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், திடீரென்று இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் மதுமிதா தபால் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அதை நிகழ்ச்சியைத் தொகுத்த கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்று தெரிவித்திருப்பதோடு, தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56 வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா குற்றம் சாட்டியிருப்பதாகத் தெரிகிறது.

பிக்பாஸ் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் பார்க்கலாம்..!