கர்ணன் என்றால் சிவாஜிக்குப் பிறகு அர்ஜுன்தான் – எஸ் தாணு
கன்னடத்தில் முனி ரத்னா எழுதி தயாரித்து நாகன்னா இயக்கியுள்ள குருக்ஷேத்ரம் 3டி படத்தினை தமிழில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு பேசியதிலிருந்து…
“1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்தேன். இப்போது இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது.