தானைத் தலைவன் கவுண்டமணியோடு பேசி பல காலமாச்சேன்னு நேத்து போனைப் போட்டேன்.
.
“பாமரன் எப்படி இருக்கீங்க…? வீட்டோட இருக்கீங்களா” என்றார்.
.
நானெங்கீங்க…. அடங்காம ஆடிகிட்டுதான் இருக்கேன் என்றேன்.
.
தலைவரே…. வாக்கிங் என்னாவது போறீங்களா…?
.
“ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் ஆபீஸ் வருவேன்… அப்புறம் ஒரு மணியோட டிரைவர அனுப்பீருவேன்.
.
சந்துக்கு சந்து பேரிகார்டு போட்டு போலீஸ் நிக்கிறாங்க…
.
போலீஸ் பாத்தா
அவுங்ககிட்ட பேசி பதில் சொல்லணும்…
எதுக்கு நமக்கு அது….
.
அப்பறம் கையிலெ கேமரா வெச்சிருக்கான் டப்புன்னு போட்டோ எடுத்து வாட்சப்புல போடுவான்… எதுக்கு நம்மளுக்கு வம்பு….”என்று சொல்லி…
கோலிவுட்டில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த இளம் நாயகிகளுள் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார்.
2012-ம் வரு டம் சாட்டை படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து குற்றம் 23, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மகாமுனி திரைப்படம் இவருக்கு சிறந்த பெயரை பெற்றுத்தர விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் .
எப்போதும் ஸ்லிம்மாக, ஆக்டிவாக இருப்பதெப்படி? என்ற கேள்விக்கு மகிமா தந்த விளக்கம்…
“இதுக்குக் காரணம் என் ஃபுட் ஹேபிட்-தான்னு…
Read More
கொரோனா காரணமாக நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது.
ஆனாலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருது. எனவே சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் வீட்டில் பதுக்கி…
Read More
கோலிவுட்டில் மார்கெட் உள்ள நடிகர் பட்டியலில் இன்னமும் இருப்பவர் பட்டியலில் உள்ளவர் சிவகார்த்திகேயன் .
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான படம் ‘ஹீரோ’. இதை மித்ரன் இயக்கி இருந்தார்.
ஆனால் இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று போஸ்கோ பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இடை காலத்தடை வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும், மொழிமாற்றம் மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை…
Read More
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை…
Read More
‘ ஓ மை கடவுளே ‘ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். ஏற்கெனவே சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர்.
இதனால் இவரது சினிமா ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு சீரியல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சின்னத்திரையின் மூலம் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணிபோஜனை , தொகுப்பாளினி ஒருவர் சின்னத்திரையில் இவர் தான் நயன்தாரா என்று கூப்பிட, சின்னத்திரை நயன்தாரா ‘ ஆனார் வாணி.
வாணி தெலுங்கில் 2019 ஆம் ஆண்டில், ‘ மீக்கு மாத்ரமே செப்தா…
Read More
லாக் டவுன் முடிந்து எப்போது சினிமா படப் பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாத நிலையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் ஜூன் மாதம் நடக்கப் போகிறதாம்.
இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தேர்தல் அட்டவணையையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020…
Read More
கொரோனா லாக்டவுன் அறிவிக்கப் பட்ட உடனேயே முன்வந்து அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோ க்களையே சவுக்கெடுக்காமல் விளாசி தள்ளி இருக்கிறார் ஆந்திர சினிமாவில் 40 ஆண்டுகாலம் நடிக நடிகையரை ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டர் ராகேஷ்.
தெலுங்கு ஹீரோக்கள் மொத்தமாக சுமார் 25 கோடிக்கு மேல் பிரதமர், முதமைச்சர் நிதிக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகுக்கும் உதவி இருக்கிறார்கள்.
அதற்குப்பின் வந்தாலும் பாலிவுட் ஹீரோக்கள் வாரிக் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தெலுங்கு நடிகர்களின் உதவி ஒன்றும் லேசுப்…
Read More