June 27, 2026
  • June 27, 2026
Breaking News

Tag Archives

இந்த ஆட்சியின் முடிவு அசிங்கமாகாமல் இருக்க சிறிய வாய்ப்பு – கமல் காட்டம்

by on May 7, 2020 0

தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா […]

Read More

ஜூம் கால் மூலம் நிர்வாகிகள் ரசிகர்களிடம் பேசிய கமல்

by on April 8, 2020 0

இரண்டு நாள் முன்பு மக்களின் குரலை வெளிப்படுத்தும் விதமாக மோடிக்கு சில பல கேள்விகளும், கோபங்களும் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவது மட்டுமன்றி, ரசிகர்களுடனும் ஜூம் காலில் பேசி வருகிறார். அந்த வகையில் இடுப்புக்குக் கீழே செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகரான போகன் என்பவருடன், ZOOM கால் மூலமாகப் பேசியுள்ளார் கமல். போகனால் சரியாகப் பேச முடியாத காரணத்தால் அவருக்கு அருகிலிருந்தவர்கள் வீடியோ […]

Read More

நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்

by on April 6, 2020 0

கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்தியத் […]

Read More

வீடுகளில் விளக்கேற்ற சொன்ன பிரதமர் பேச்சை நையாண்டி செய்த கமல்

by on April 3, 2020 0

கொரோனா நடவடிக்கைகளுக்காக மூன்றாவது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒளிஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமீப காலமாக பிரதமர் பேச்சுகளை அதிகமாக விமர்சிக்கும கமல் பிரதமரின் இந்த பேச்சு குறித்தும் நையாண்டி செய்திருக்கிறார். அது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில்… “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் […]

Read More

கமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்

by on March 28, 2020 0

அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்… உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், […]

Read More

தனிமைப் படுத்தப்பட்ட கமல் குடும்பம் – கொரோனா முன்னெச்சரிக்கை

by on March 25, 2020 0

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா  முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். “இந்த நிலைமை கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் […]

Read More

கொரானோ ஆபத்து பற்றி எச்சரிக்கும் கமல் வீடியோ

by on March 21, 2020 0

கொரானா பாதிப்பில் இந்தியா மூன்றாவது நிலையை எட்டியுள்ளது. இது மிகவும் ஆபத்தான கட்டம். ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு வந்தபாடில்லை.  எனவே, பிரபலங்கள் முக்கியமாக நடிகர்கள் கானோலியில் தோன்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க, அதற்கு முதல் குரல் (முகம்) கொடுத்திருக்கிறார் கமல்.  அந்த காணொலி கீழே…

Read More

தலைவர் மீது துரும்பு பட்டாலும் – தமிழக அரசை எச்சரித்த மக்கள் நீதி மையம்

by on March 3, 2020 0

கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை  சென்னை வேப்பேரி […]

Read More

இந்தியன்2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்

by on March 1, 2020 0

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” […]

Read More