April 27, 2024
  • April 27, 2024
Breaking News

Currently browsing அரசியல்

மக்கள் நலன், சமூக நீதிக்காக வாழ்வை அர்ப்பணித்த தலைவருக்கு அஞ்சலி – பிரதமர் மோடி

by by Aug 8, 2018 0

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி மண்டபம் வந்தார். அப்போது கலைஞரின் துணைவியார் ராசாத்தி அம்மாள், மகன் மு.கஸ்டாலின், மகள் கனிமொழியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருணாநிதியின் மரணச் செய்தி வெளியான நேற்றே அவருக்குப் புகழாரம் சூட்டி தன் ட்விட்டர் பக்கம் மூலம் மோடி வெளியிட்ட இரங்கல் செய்திகளின் தொகுப்பு…

“கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர்….

Read More

ஐந்து முறை தமிழக முதல்வர்… சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர் – முதல்வர் புகழாரம்

by by Aug 7, 2018 0

இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பள்ளிப் பருவத்தில் நாடகம்,…

Read More

முதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

by by Jul 31, 2018 0

சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து…

“அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில்…

Read More

அப்துல் கலாம் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் – டிடிவி தினகரன்

by by Jul 27, 2018 0

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் சென்றார்.

அங்கு அப்துல்கலாமின் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு ஊடகங்களிடம் பேசியதிலிருந்து…

“அப்துல்கலாம் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவரது நினைவிடத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவரது இந்த நினைவு நாளில் மாணவர்கள் இந்தியாவை வல்லரசாக்குவோம்…

Read More

மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தண்ணீர் தரலாம் – குமாரசாமி

by by Jul 23, 2018 0

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே இருக்கும் நான்கு அணைகள் போதாதென்று தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் ‘மேகதாது’வில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். கர்நாடகாவில் உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரிய அளவிலானதாக இருக்கும்.

ஓப்பந்தப்படியே சரியாக தண்ணீர் திறப்பதில்லை என்ற நிலையில் புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அணை கட்ட…

Read More

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகை

by by Jul 19, 2018 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.

இதன் விபரம்…

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், 2006-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கான அனுமதியை முறையாகப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அத்துடன் இந்த அனுமதியைப் பெற சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி பாட்டியாலா…

Read More

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்த தினகரன்

by by Jul 15, 2018 0

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் விபரம்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சியை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்குக் காரில் புறப்பட்டு சென்றார்.

வழியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அப்போது தினகரன்…

Read More

அநீதி இழைக்கப்பட்ட நீட் மாணவர்களுக்கு நீதி கிடைத்தது- மார்க்சிஸ்ட் மகிழ்ச்சி

by by Jul 10, 2018 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 
2018, ஜூலை 10-11 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன்  தலைமையில் நடைபெறுகிறது.
 
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முதல்நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் நீட்…

Read More

தொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது – ஐகோர்ட் கருத்து

by by Jul 7, 2018 0

சென்னை -சேலம் பசுமைச்சாலை அமைக்க, பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தன் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்ள, கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், அவருக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து பா.ம.க. துணை…

Read More

8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் போராட்டம்

by by Jul 2, 2018 0

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்க, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 8 வழிச்சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.

பழனியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவரது பேச்சிலிருந்து…

“அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம் போல சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.. எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். ஆனால், இதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.

8 வழிச்சாலை…

Read More