
நான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது முடிவெடுக்காதீர்கள் – வைரமுத்து
நாடெங்கும் புயல் வீசிக்கொண்டிருக்கும் ‘மி டூ’ விவகாரத்தில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடுத்திருந்த பாலியல் குற்ற ச்சாட்டுகள் கவிஞரைப் பார்த்து ‘யூ டூ..?’ என்ற கேள்வியை முன்வைத்தது.

தமிழக ரெட் அலர்ட்… சென்னைவாசிகள் பயப்படத் தேவையில்லை – தமிழ்நாடு வெதர்மேன்
கேரளாவில் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட போது மிக கனமழை பெய்தது தெரிந்திருக்கலாம். இப்போது பேரிடர் மேலாண்மைத்துறை, வரும் அக்டோபர் 7-ம்தேதி அன்று தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’ அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 7-ம் தேதி சுமார் 25 செ.மீ அளவு அதீத கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல் என அனைத்து நடவடிக்கைகளிலும் தயாராக இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
அன்றும் அதனை ஒட்டிய நாள்களிலும் வானிலை…
Read More
ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’
உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.
இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே.
பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில்…
Read More
75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்
திருமண விருந்துகள் என்றாலே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெயர் பெற்றவர் ‘அறுசுவை அரசு’ என்று புகழப்பட்ட நடராஜன். தன் 90வது வயதில் அவர் நேற்று (17-09-2018) இயற்கை எய்தினார்.
1950ம் வருடம் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 75,000 திருணங்களுக்கு நடராஜன் விருந்து படைத்திருக்கிறார் என்பது வியப்பான செய்தியாக இருக்கிறது.
முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் மகள் திருமணத்துக்கு விருந்து படைத்தபோது கிரி அவர்களால் ‘அறுசுவை அரசு’ பட்டம் தரப்பட்டதாக அவரது…
Read More
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…
Read More
நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதால் நித்தியானந்தா தப்பி ஓட்டம்
பரபரப்புகளுக்குப் பெயர் போனவர் நித்யானந்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நடத்தி வரும் ஆசிரமத்தில் பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தாவின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.
பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
சென்ற வாரம் 6-ந்தேதி இந்த வழக்கு…
Read More
பாரத் பந்த் – ஆளும் கட்சி ஆதரிக்காததால் தமிழகத்தில் பிசுபிசுத்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் பந்த்தை ஆதரித்தும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பந்த்தை ஆதரிக்காதநிலையில் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
சென்னையைப் பொறுத்தவரை வழக்கம் போல பஸ்-ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், தனியார் பள்ளி வேன்கள் வழக்கம் போல ஓடின….
Read More
காக்கிவாடன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி
ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி கொண்டாட சில உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு அபாயகரமான தொழிலாக இருக்கிறது பட்டாசு தயாரிக்கும் தொழில்.
அப்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க, உள்ளே இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். புகை மூட்டத்தில் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்கப்…
Read More
குட்கா வழக்கில் ஐவர் கைது – 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச…
Read More
குட்கா விவகாரம் தொடர்பாக 40 இடங்களில் சிபிஐ ரெய்டு
தடையை மீறி தமிழ்நாட்டில் குட்கா முதலான போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தி.மு.க. சார்பில் கோரப்பட்டதை அடுத்து ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூன் மாதம் விசாரணையைத் தொடங்கினார்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குட்கா வியாபாரி மாதவராவிடம் விசாரணை நடத்தி அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில்…
Read More