April 24, 2024
  • April 24, 2024
Breaking News

Currently browsing சமுதாயம்

75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்

by by Sep 18, 2018 0

திருமண விருந்துகள் என்றாலே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெயர் பெற்றவர் ‘அறுசுவை அரசு’ என்று புகழப்பட்ட நடராஜன். தன் 90வது வயதில் அவர் நேற்று (17-09-2018) இயற்கை எய்தினார். 

1950ம் வருடம் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 75,000 திருணங்களுக்கு நடராஜன் விருந்து படைத்திருக்கிறார் என்பது வியப்பான செய்தியாக இருக்கிறது.

முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் மகள் திருமணத்துக்கு விருந்து படைத்தபோது கிரி அவர்களால் ‘அறுசுவை அரசு’ பட்டம் தரப்பட்டதாக அவரது…

Read More

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு

by by Sep 15, 2018 0

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

இந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…

Read More

நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதால் நித்தியானந்தா தப்பி ஓட்டம்

by by Sep 12, 2018 0

பரபரப்புகளுக்குப் பெயர் போனவர் நித்யானந்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நடத்தி வரும் ஆசிரமத்தில் பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தாவின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சென்ற வாரம் 6-ந்தேதி இந்த வழக்கு…

Read More

பாரத் பந்த் – ஆளும் கட்சி ஆதரிக்காததால் தமிழகத்தில் பிசுபிசுத்தது

by by Sep 10, 2018 0

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் பந்த்தை ஆதரித்தும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பந்த்தை ஆதரிக்காதநிலையில் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

சென்னையைப் பொறுத்தவரை வழக்கம் போல பஸ்-ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், தனியார் பள்ளி வேன்கள் வழக்கம் போல ஓடின….

Read More

காக்கிவாடன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி

by by Sep 8, 2018 0

ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி கொண்டாட சில உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு அபாயகரமான தொழிலாக இருக்கிறது பட்டாசு தயாரிக்கும் தொழில்.

அப்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க, உள்ளே இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். புகை மூட்டத்தில் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்கப்…

Read More

குட்கா வழக்கில் ஐவர் கைது – 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

by by Sep 7, 2018 0

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச…

Read More

குட்கா விவகாரம் தொடர்பாக 40 இடங்களில் சிபிஐ ரெய்டு

by by Sep 5, 2018 0

தடையை மீறி தமிழ்நாட்டில் குட்கா முதலான போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தி.மு.க. சார்பில் கோரப்பட்டதை அடுத்து ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூன் மாதம் விசாரணையைத் தொடங்கினார்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குட்கா வியாபாரி மாதவராவிடம் விசாரணை நடத்தி அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில்…

Read More

சந்திராயன் 2 ஜனவரி 3-ல் விண்ணில் செலுத்தப்படும்

by by Aug 29, 2018 0

மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்குடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி சந்திராயன்-2 செயற்கை கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 செயற்கை…

Read More

நீங்கள் முதல்வரானால் உங்கள் முதல் கையெழுத்து? – கமல்ஹாசன் பதில்

by by Aug 27, 2018 0

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அந்நிகழ்வில் அவர் “அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்..!” என்றார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

அதில் “முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்தை…

Read More

மதுரை தேனி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by by Aug 17, 2018 0

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்க, இன்று காலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மதுரை, தேனி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது.

வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக…

Read More