April 20, 2024
  • April 20, 2024
Breaking News

Currently browsing சமுதாயம்

சென்னையில் கன்னடப் படத்துக்குத் தடை விதித்தபோது ரஜினி எங்கே போனார்..?

by by Jun 2, 2018 0

கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தைத் திரையிடக் கூடாதென்று சில அமைப்புகள் கோரி வரும் நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்..

கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ரஜினி, ‘‘காலா படத்துக்கான எதிர்ப்பைப் பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்..!” என்றார்.

ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக…

Read More

எங்கள் போராட்டத்தை ரஜினி இப்படி விமர்சித்திருக்க வேண்டாம் – சந்தோஷ்ராஜ்

by by May 31, 2018 0

நேற்று ரஜினியின் தூத்துக்குடி வருகையின்போது அங்கு மருத்துவமனையின் சிகிச்சை பெறும் சந்தோஷ்ராஜ் என்ற வாலிபர் ரஜினியிடம் “நீங்கள் யார்..? எங்கிருந்து வருகிறீர்கள்..?” என்று கேட்ட கேள்வி நேற்று சமூக வலை தளங்களில் வைரலானது.

ரஜினியைத் திகைக்க வைத்த அந்தக் கேள்வியைக் கேட்ட சந்தோஷ்ராஜ் பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு சென்றபோதுதான் ரஜினிக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. இது…

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

by by May 29, 2018 0

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில் மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.5 கோடி…

Read More

சென்ட்ரல் வழித்தட மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்

by by May 25, 2018 0

சென்னையில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் 28 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்து நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.. சென்ட்ரலில் இருந்து விமான…

Read More

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் வினியோகம் துண்டிப்பு

by by May 24, 2018 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில், இன்று முதல் ஸ்டெர்லைட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஊர்வலமாக சென்ற பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக மாறியபோது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதில் பத்து பேர் சம்பவ இடங்களிலேயே பலியாக, நேற்று…

Read More

காவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல – ரஜினி

by by May 20, 2018 0

இன்று ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் போயஸ் கார்டனிலுள்ள தன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில்களின் சாரம்…

பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்.

150 தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே.

கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர்…

Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டாக்சி கட்டணம் உயரும் அபாயம்

by by May 19, 2018 0

தினமும் விலை ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் மாநில வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் கூறப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 6 நாட்களில் பெட்ரோல்…

Read More

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

by by May 15, 2018 0

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது வயது 71.

தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலகுமாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். தவிர, சினிமாவுலகிலும் புகழ்பெற்றிருந்த அவர் கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி, இலக்கிய சிந்தனை உள்ளிட்ட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப…

Read More

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை

by by May 13, 2018 0

ரஜினி இந்த மாதம் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

இன்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

அத்துடன் பி.ஜே.பியுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்க, “வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும்…” என்று…

Read More

உ.பியில் பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் புகார்

by by May 12, 2018 0

உ.பியைச் சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மாவின் மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்..

மேலும், உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அப்பெண் எழுதியுள்ள கடிதத்தில், தனது குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை தெரிவிக்க முதல்-மந்திரியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தனது நற்பெயரை சீர்குலைக்க…

Read More