பைரசி தியேட்டர் மீதான தனிநபர் போராட்டம் வெல்லுமா..?
நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்
இயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர்.
ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார்….
Read More
ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுகிறாரா – கோர்ட்டில் முன் ஜாமீன் மனு
‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிக்ளை நீக்க வேண்டுமென்று ஆளும் கட்சியினர் போராட்டங்களை நடத்துவதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இது குறித்து சர்கார் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் இல்லை.
ஆனால், சர்காருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கமலும், ரஜினியும் தணிக்கை செய்யப்பட்ட படத்தின் மீதான போராட்டங்கள் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று காலை முதலே…
Read More
சர்கார் படத்துடன் கூடிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் தீபாவளி வாழ்த்து
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும்.
இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன்.
அதில் சர்க்கார் படத்தையும் சேர்த்துக்கொண்டு அதில் வாழ்த்தியிருப்பதுதான் ஹைலைட். அந்த ட்வீட் கீழே…
#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம்…
Read More
ஓவியா திறக்கும் சீரமைக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்..!
அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால்தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்.
இதை வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார். அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதை கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். பழைய கட்டிடமாக…
Read More
நெல் ஜெயராமன் குறித்த நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சிக் கடிதம் – தவிர்க்காமல் படியுங்கள்
“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார்.
ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு ஆய்வாளர்களைப் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி…
Read More
நான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது முடிவெடுக்காதீர்கள் – வைரமுத்து
நாடெங்கும் புயல் வீசிக்கொண்டிருக்கும் ‘மி டூ’ விவகாரத்தில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடுத்திருந்த பாலியல் குற்ற ச்சாட்டுகள் கவிஞரைப் பார்த்து ‘யூ டூ..?’ என்ற கேள்வியை முன்வைத்தது.
தமிழக ரெட் அலர்ட்… சென்னைவாசிகள் பயப்படத் தேவையில்லை – தமிழ்நாடு வெதர்மேன்
கேரளாவில் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட போது மிக கனமழை பெய்தது தெரிந்திருக்கலாம். இப்போது பேரிடர் மேலாண்மைத்துறை, வரும் அக்டோபர் 7-ம்தேதி அன்று தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’ அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 7-ம் தேதி சுமார் 25 செ.மீ அளவு அதீத கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல் என அனைத்து நடவடிக்கைகளிலும் தயாராக இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
அன்றும் அதனை ஒட்டிய நாள்களிலும் வானிலை…
Read More
ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’
உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.
இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே.
பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில்…
Read More
75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்
திருமண விருந்துகள் என்றாலே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெயர் பெற்றவர் ‘அறுசுவை அரசு’ என்று புகழப்பட்ட நடராஜன். தன் 90வது வயதில் அவர் நேற்று (17-09-2018) இயற்கை எய்தினார்.
1950ம் வருடம் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 75,000 திருணங்களுக்கு நடராஜன் விருந்து படைத்திருக்கிறார் என்பது வியப்பான செய்தியாக இருக்கிறது.
முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் மகள் திருமணத்துக்கு விருந்து படைத்தபோது கிரி அவர்களால் ‘அறுசுவை அரசு’ பட்டம் தரப்பட்டதாக அவரது…
Read More