June 27, 2026
  • June 27, 2026

சத்தீஷ்கர் பஞ்சாபில் மதுபானங்கள் வீட்டுக்கு டெலிவரி

by on May 5, 2020 0

சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. அதன்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்ததால் கொரோனா பரவலை தடுக்கும் சமுக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனை அறிந்த சத்தீஸ்கர் அரசு ‘குடி’ மகன்களின் வசதிக்காக புதிய முறையை அமல்படுத்தியது. இதற்காக சத்தீஷ்கர் மாநில அரசு வாணிப கழகம் ஆன்லைன் வெப் போர்டல் எனப்படும் வலைதளத்தை துவக்கியுள்ளது. இந்த வலைதளத்தில் தங்களது ஆதார் எண்ணை வைத்து […]

Read More

ஹீரோக்களுக்கு முன்னுதாரணமாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி

by on May 5, 2020 0

உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு ‌கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், தான் தற்போது நடித்துவரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என்கிறார். மேலும் இத்தகைய நடவடிக்கைகளே திரைத்துறை விரைவாக உயிரதெழ உதவும் என திடமாக நம்புகிறார். அவர் […]

Read More

Breaking News தமிழ்நாட்டில் மே 7 முதல் கட்டுப் பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு

by on May 4, 2020 0

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கர்நாடக, ஆந்திராவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது. […]

Read More

மலையாளப் படங்களின் இறுதிக்கட்ட பணிகளுக்கு கேரள அரசு அனுமதி

by on May 4, 2020 0

கேரளாவில் மலையாளப் படங்களின் இறுதிகட்டப் பணிகளுக்குக் கேரள அரசு அனுமதி வழங்கியது. அதிகபட்சம்5 நபர்கள் தேவைப்படும் திரைப்படப் பணிகளை மே 4 முதல் தொடங்கலாம். சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது எனக் கேரள அரசின் பண்பாடு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறினார். இதையடுத்து, கேரளாவில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் […]

Read More

சினிமா பணிகளுக்கு தளர்வு கேட்டு படத்தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் விண்ணப்பம்

by on May 4, 2020 0

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து எல்லா தொழில்களும் முடக்கப்பட்டன. கிட்டத்தட்ட 5 வாரங்கள் கழிந்த நிலையில் ஒரு சில தொழில்களுக்கு மட்டும் ஊரடங்கி லிருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா துறையிலும் நிபந்தனைகளின் அடிப்படையில் குறைந்த பணியாளர்களை வைத்து செய்யக்கூடிய போஸ்ட் புரொடக்ஷன் முதலான வேலைகளை தொடங்க அனுமதி கோரி தயாரிப்பாளர்களின் சார்பில் இன்று முதலமச்சரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது . முதலமைச்சர் சார்பாக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் […]

Read More

விஷால் தங்கை நீஷ்மா செய்த கொரோனா சேவை

by on May 3, 2020 0

நடிகர் விஷால் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்துு வருகிறார். இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி இருக்கிறார். இதனை அறிந்த விஷால் உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததின் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார். இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து […]

Read More

தினக்கூலி தொழிலாளிகளுக்கு உதவ ஸ்ரேயாவின் புதிய முயற்சி – டான்ஸ் வீடியோ இணைப்பு

by on May 3, 2020 0

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவழுதும் 3 ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் தொடர் ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர் கள் உள்ளிட்டோருக்கு உதவுவதற்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் நடிகை ஸ்ரேயா அறிவித்திருக்கிரார். அதில் தன்னுடன் நடனம், யோகா போன்றவற்றை மேற்கொள்ள விரும்புவர்கள், தான் அறிவித்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.200 […]

Read More

அண்ணனுடன் வீட்டுக்குள் கபடி விளையாடும் ராகுல் ப்ரீத் சிங் வைரல் வீடியோ

by on May 3, 2020 0

கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 18ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். […]

Read More
CLOSE
CLOSE