June 27, 2026
  • June 27, 2026

அடுத்தடுத்த அதிர்ச்சியில் பாலிவுட் – ரிஷி கபூர் மரணம்

by on April 30, 2020 0

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான ‘பாபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார். நேற்று பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இறந்த நிலையில், இன்று ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூகவலைத்தளங்களில் தங்களின் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். கடந்த […]

Read More

அம்மா இறந்த சில தினங்களில் மரணம் அடைந்த பிரபல இந்திய நடிகர்

by on April 29, 2020 0

1988 ஆம் ஆண்டு வெளியான ‘சலாம் பாம்பே’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் கான், தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும், ‘லைஃப் ஆஃப் பை’, ‘ஜுராசிக் வேர்ல்டு’ போன்ற […]

Read More

லண்டனில் சிக்கிய தம்பி மீண்டு வர மாஸ்டர் மாளவிகா கவலை

by on April 28, 2020 0

விஜய் ரசிகர்களுக்கெல்லாம் மாஸ்டர் எப்போது ரிலீஸாகும் என்ற கவலை. ஆனால், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கோ தன் தம்பி எப்போது வீட்டுக்கு வருவான் என்ற கவலை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா தனது தம்பி ஆதித்யா லண்டனில் சிக்கித்தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். “படிப்பதற்காக லண்டன் சென்ற என்னோட பிரதர் கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கிட்டார். இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டும் இருக்கார். கல்லூரி வளாகத்திற்கு வெளியே வாடகை […]

Read More

உடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ

by on April 28, 2020 0

பிரபல நடிகையும் அவரது மகனும் உடைகளை மாற்றி போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கனிகா. இவர் ‘எதிரி’, ‘வரலாறு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற 9 வயது மகன் உள்ளார். பெரும்பாலும் தனது மகனுடன் நேரத்தை செலவழிக்க விரும்பும் கனிகா, தற்போது அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். மகனின் உடையை தனக்கும், தன்னுடைய […]

Read More

ஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்

by on April 28, 2020 0

நடிகை ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், “விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. தஞ்சாவூருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோயில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல […]

Read More

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்வோம் – சூர்யா அறிக்கை

by on April 28, 2020 0

ஒரு விழாவில் நடிகை ஜோதிகா கோவிலையும் கல்விக் கூடங்களையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் இன்றைக்கு ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது பெரும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ஜோதிகாவின் கணவரும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Read More

Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்

by on April 27, 2020 0

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது ஓயும் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த Zoom செயலியை அவர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியானது. ஒரு தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொது […]

Read More

சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – எச்சரிக்கும் சீமான்

by on April 27, 2020 0

துல்கர் சல்மான் நடித்த ‘ வரனே ஆவஸ்யமுண்டு ‘ பட த்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்க தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, மன்னிப்பு கோரி அதற்கு விளக்கம் அளித்தார் துல்கர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே ஆவஸ்ய முண்டு ‘ (Varane Avashyamundu)” படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த் […]

Read More

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை விரைவில் ஊரடங்கு பற்றி புதிய அறிவிப்பு

by on April 27, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 27,892  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.   6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனினும் கொரோனாவின் பாதிப்பு குறையாததால், அறிவித்துள்ளபடி மே 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்போவதாக சில மாநிலங்கள் அறிவித்து உள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.   […]

Read More
CLOSE
CLOSE