August 17, 2026
  • August 17, 2026

டாஸ்மாக் திறப்பு பற்றிய பார்த்திபன் பார்வை

by on May 7, 2020 0

பல்கலை வித்தகர் பார்த்திபன் இன்ஸ்டா பக்கத்தில் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் அவர் நடித்து பிரபலமாக பேசிய வசனத்தை கொஞ்சம் மாற்றி புதிதான கமெண்ட் போட்டுள்ளார். மக்காள்!!!! இன்னைக்கு மது’ரைக்கு போறவுக நிச்சயம் மேலூரு’க்கு போவீக. நாத்தம் குடிக்க – நாசமா போவாதீக. இந்த மாசமட்டுமாவது போவாதீக-உங்க பொண்டு புள்ளைகளுக்காகவாது போவாதீக புண்ணியமாப் போவுங்க!  

Read More

இந்த ஆட்சியின் முடிவு அசிங்கமாகாமல் இருக்க சிறிய வாய்ப்பு – கமல் காட்டம்

by on May 7, 2020 0

தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா […]

Read More

அமலா பால் வெளியிட்டிருக்கும் பார்ட்டி வீடியோ

by on May 6, 2020 0

நடிகை அமலா பால் தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே ஒற்றையாக பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். டிவியில் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஆடியபடி தம்பிக்கு “ஹேப்பி பர்த் டே….” குரல் கொடுத்தபடி பார்ட்டி ஆட்டமும் போடுகிறார் அமலா பால். அவர் ஆடி சவுண்ட் விடும் வீடியோ கீழே…

Read More

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

by on May 6, 2020 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆங்கில மருத்துவம் அறிவித்துக் கொண்டிருக்கிறது.   இந்நிலையில், தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் தான் ஒரு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.   தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால் குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு […]

Read More

என்னைப் பற்றி வரும் செய்திகள் தவறானவை – காமெடி நடிகர் செந்தில்

by on May 6, 2020 0

தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை தனி இடம் உண்டு இந்த இரட்டையர் காமெடியை ரசிக்க தமிழ் சினிமா ரசிகனை இல்லை என்று சொல்ல முடியும். ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ஹார்டி தமிழில் என்ற இரட்டையர் செய்த காமெடி அட்டகாசங்கள் தவிர்க்க முடியாதவை. அதுபோலவே கவுண்டமணி-செந்தில் தமிழில் பெயர் பெற்றனர். கவுண்டமணி செந்தில் இருவரும் ஒரு கட்டத்தில் தாங்கள் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு நடித்து வந்திருந்தாலும் காலமாற்றத்தினால் இவர்கள் இருவரும் இப்போது நடிக்காமல் […]

Read More

சத்தீஷ்கர் பஞ்சாபில் மதுபானங்கள் வீட்டுக்கு டெலிவரி

by on May 5, 2020 0

சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. அதன்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்ததால் கொரோனா பரவலை தடுக்கும் சமுக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனை அறிந்த சத்தீஸ்கர் அரசு ‘குடி’ மகன்களின் வசதிக்காக புதிய முறையை அமல்படுத்தியது. இதற்காக சத்தீஷ்கர் மாநில அரசு வாணிப கழகம் ஆன்லைன் வெப் போர்டல் எனப்படும் வலைதளத்தை துவக்கியுள்ளது. இந்த வலைதளத்தில் தங்களது ஆதார் எண்ணை வைத்து […]

Read More

ஹீரோக்களுக்கு முன்னுதாரணமாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி

by on May 5, 2020 0

உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு ‌கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், தான் தற்போது நடித்துவரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என்கிறார். மேலும் இத்தகைய நடவடிக்கைகளே திரைத்துறை விரைவாக உயிரதெழ உதவும் என திடமாக நம்புகிறார். அவர் […]

Read More

Breaking News தமிழ்நாட்டில் மே 7 முதல் கட்டுப் பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு

by on May 4, 2020 0

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கர்நாடக, ஆந்திராவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது. […]

Read More
CLOSE
CLOSE