April 23, 2024
  • April 23, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
May 6, 2020

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

By 0 796 Views
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆங்கில மருத்துவம் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் தான் ஒரு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
 
தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால் குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும் அவர் பேசியிருந்தார். 
 
இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் புகார் கொடுத்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மருத்துவர் தணிகாசலத்தை கைது செய்தனர். 
 
அவரை மே 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.