March 29, 2024
  • March 29, 2024
Breaking News
May 18, 2020

திறந்த மூன்றாம் நாளே வெறிச்சோடிய மதுக்கடைகள்..?

By 0 722 Views

மே 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பெரும்பாலான மதுக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டதாம்.

மதுக்கடை திறந்த மூன்றாவது நாளிலேயே, மதுப்பிரியர்களின் வருகை குறைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் இன்று காலை முதல் மத்தியான 2 மணி வரை ஒருவர் கூட இன்னும் மது வாங்க வரவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

 குடி மக்கள் திருந்த வாய்ப்பில்லை. கைக்காசு குறைந்து போச்சோ ..?