நாளுக்கு நாள் நாட்டில் பெருகி வரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் விண்ணை எட்டிக் கொண்டிருக்கிறது. நகைச்சுவை நடிகரும் ஓவியருமான திரு பாண்டு இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவருக்கு 74 வயது. அவரது மனைவி குமுதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மிகவும் நல்ல மனம் படைத்த திறமைசாலியான பாண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு பிரபு, பஞ்சௌ மற்றும் பிண்டு ஆகிய மூன்று மகன்கள் […]
Read Moreதமிழகத்தில் ஒரேநாளில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று – 144 பேர் உயிரிழப்பு. சென்னையில் ஒரே நாளில் 6228 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர். இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீச வாய்ப்புள்ளது.பகுதி நேர, இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இருக்காது – எய்ம்ஸ் இயக்குநர். நாளை ஆளுநரை சந்தித்து […]
Read Moreமே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு : கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு உத்தரவு. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை – திமுக தலைவர் ஸ்டாலின். மே 5ஆம் தேதி மேற்குவங்க முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி. எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால். கொரோனா தடுப்பு பணிகளுக்கு 71 கோடி ரூபாயை ஒதுக்கிய எஸ்பிஐ வங்கி. தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் […]
Read Moreசிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் […]
Read Moreநடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தி.மு.க., வரலாற்றில், இளைஞரணி தலைவராக பணியாற்றிய ஸ்டாலின், 1984ல் முதன் முறையாக சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். ஆனால், இப்போது தி.மு.க. இளைஞரணி தலைவராக இருக்கும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தன், 43வது வயதில் முதன்முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, முதல் தேர்தலிலே வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி […]
Read Moreதமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகாசியில் அஜித் ரசிகர்கள் மற்றும் அன்பு தடம் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது, பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது. அண்மைக் காலமாக இரத்த தேவை அதிகமாகி தானம் குறைந்து வருவதால் குழந்தைகள் பலர் பெரும் […]
Read Moreதமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது. பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். […]
Read Moreகர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3000க்கும் அதிகமான நோயாளிகள் தலைமறைவாகி இருப்பதாக அம்மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா தெரிவித்திருக்கிறார். வீட்டில் இருந்து வெளியேறிய அத்தனை பேரும் அ செல்போன்களை அணைத்து வைத்திருப்பதாகவும், தற்போது எங்கு தங்கியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கொரோனா பரவலை மேலும் தீவிரமாக்கிவிடும் என்பதால் தலைமறைவாகி உள்ள நோயாளிகள் தயவுசெய்து செல்போனை ஆன் செய்ய வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அசோகா கேட்டுக்்கண்டிருக்கிறார். இதனிடையே, திருப்பதியிலும் […]
Read Moreஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் , கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி […]
Read More