May 3, 2024
  • May 3, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் திரட்டிய 500+ கோடி பிரீமியம்
July 25, 2023

மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் திரட்டிய 500+ கோடி பிரீமியம்

By 0 311 Views

தென்னிந்தியாவில், மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் ரூ.500+ கோடி மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தில் வலுவான 37% அதிகரிப்பை பதிவு செய்கிறது, மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறது.

·மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் அதன் புதுமையான உடல்நல காப்பீட்டு தீர்வுகளுடன் இந்தியா மற்றும் தெற்கு சந்தைகள் முழுவதிலும் அதன் இருப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

இந்த தனித்தியங்கும் உடல்நல காப்பீடு நிறுவனம், தென்னிந்தியாவில் 3,300 க்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளையும், நாடு முழுவதும் 8,700 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது.

· தென் பிராந்தியத்தில் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த நிறுவனம் புதிய கிளை அலுவலகங்களைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் நிதியாண்டு 24 இல் அதிக ஊழியர்களையும் கிட்டத்தட்ட 10,000 முகவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

சென்னை, ஜூலை 25, 2023– இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தனித்தியங்கும் உடல்நல காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ், அதன் புதுமையான உடல்நல காப்பீட்டு தீர்வுகளுடன், உடல்நல நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் பிரிவுகளை அடைவதற்கும் இந்தியா மற்றும் தெற்குச் சந்தைகளில் தனது இருப்பை பலப்படுத்துகிறது. இந்த காப்பீட்டாளர், அதன் வலுவான பல்-வழி விநியோக வலையமைப்பு மற்றும் பல திட்ட வழங்குதல்களை மேம்படுத்துவதன் மூலம், தெற்கு சந்தையில் உடல்நல காப்பீட்டு ஊடுருவலை அதிகரிப்பதற்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கு தரமான உடல்நல பராமரிப்புக்கான எளிதான மற்றும் வாழ்நாள் அணுகலை வழங்குவதற்கும் அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது.

உடல்நலக் காப்பீட்டு நிபுணராக, மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகியவை அடங்கிய தெற்கு பிராந்தியத்தில் ஒரு வலுவான வளர்ச்சியைக் கண்டது. இந்த நிறுவனம் தென் பிராந்தியத்தில் 22-23 நிதியாண்டில் 37% வளர்ச்சியுடன் ₹500 கோடிக்கு மேல் மொத்த எழுதப்பட்ட பிரீமியம் (GWP) ஐ திரட்டியுள்ளது.

மணிப்பால்சிக்னா ஏறக்குறைய 20,000 ஆலோசகர்களைக் கொண்டுள்ளது, விநியோக நெட்வொர்க் மூலம் பிராந்தியம் முழுவதும் சுமார் 5,000 விற்பனை மையங்களில் முக்கிய பங்குதாரர்கள் உள்ளனர் மற்றும் தென்னிந்தியாவில் 25 கிளை அலுவலகங்கள் உள்ளன. மேலும், நாடு முழுவதும் உள்ள 8,700 க்கும் மேற்பட்ட பான்-இந்தியா மருத்துவமனைகளில் தென்னிந்தியாவில் 3,300 க்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளை இந்த தனித்தியங்கும் உடல்நல காப்பீட்டு நிறுவனம் கொண்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் GWP இல் ₹1000 கோடிக்கும் மேலாக அதன் வருவாயை இரட்டிப்பாக எதிர்பார்க்கிறது.

தென் பிராந்தியத்தில் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் புதிய கிளை அலுவலகங்களைத் தொடங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது மேலும் நிதியாண்டு 24 இல் தென் பகுதியை வலுவூட்ட அதிக ஊழியர்களையும் கிட்டத்தட்ட 10,000 முகவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், 2022-23 நிதியாண்டில் சிறந்த இழப்பீடு கோரும் அனுபவத்தை வழங்குவதிலும், தேவைகளின் நேரங்களில் பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை அளிப்பதிலும் அதன் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, 88.32% இன் ஒரு இழப்பீடு தீர்வு விகிதத்தைக் கொண்டிருந்தது.

மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சப்னா தேசாய் கருத்துத் தெரிவிக்கையில், “தென்னிந்தியா எங்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் மணிபால்சிக்னா இல் உள்ள நாங்கள் பிராந்தியத்தில் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நிதி நலனில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளோம். மணிபால் குழுமத்தின் உள்ளூர் நிபுணத்துவத்தின் இந்த கூட்டன்மையான, இந்தியாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனை சங்கிலி ஆக இருப்பது மற்றும் சிக்னா ஹெல்த்கேரின் உலகளாவிய அனுபவம் ஆகியவை எங்களை ஒரு உண்மையிலேயே தனித்துவமான உடல்நல பராமரிப்பு நிதி வழங்குநராக மாற்றியுள்ளது.

அதிகரித்து வரும் மருத்துவ பணவீக்கம், வாழ்க்கை முறை நோய்கள், தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் ஆகியவற்றின் காரணமாக உடல்நல காப்பீட்டிற்கான தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் மற்றும் பல்வகைப்பட்ட உடல் பராமரிப்பு நிதி தேவைகளுக்கு மலிவான, யூகிக்கக்கூடிய மற்றும் எளிமையான சுகாதார காப்பீட்டு தீர்வுகளை வழங்குவதன் மூலம் தென்னிந்தியாவில் எங்கள் வளர்ச்சி பயணத்தைத் தொடர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார்.

பல்வேறு தொழில்துறை அறிக்கைகளின்படி, சாலை போக்குவரத்து விபத்துக்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மார்பக புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்களின் தாக்கம் போன்ற வாழ்க்கை முறை நோய்களின் அதிக நிகழ்வுகளை தமிழகம் கண்டு வருகிறது. கூடுதலாக இதய நோய்கள் மற்றும் நாள்பட்ட நரம்பு சிதைவு நோய்க்கான அதன் இறப்பு விகிதமானது, தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

இவ்வாறு அதிகரித்து வரும் உடல்நல பராமரிப்பு பரவல்கள் மற்றும் செலவுகளை மனதில் கொண்டு, மணிபால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் இந்த தேவைகளை நிவர்த்தி செய்ய புதுமையான தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

மணிப்பால் சிக்னா லைப் டைம் ஹெல்த் திட்டமானது, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சுகாதாரக் காப்பீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் சில வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தீர்வுகளான, 4வது பாலிசி ஆண்டு முதல் வாழ்நாள் வரை பொருந்தக்கூடிய புதுப்பித்தல் பிரீமியத்தில் லாயல்டி பிரீமியம் தள்ளுபடிகள், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தனிநபர் மற்றும் ஒரு குடும்பத்தின் உடல்நல பராமரிப்புத் தேவைகளைப் பாதுகாப்பதற்கான பிற கவர்ச்சிகரமான நன்மைகள் மற்றும் ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் உள்நாட்டு மற்றும் உலகளாவிய காப்புக்காக உயர் மட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிற ஒரு முழுமையான உடல்நல பராமரிப்பு நிதியளிப்புத் தீர்வாகும்.

மணிப்பால்சிக்னா, 91வது நாளிலிருந்து உடனடி காப்புடன் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிற, மூத்த குடிமக்களுக்கான மணிப்பால் சிக்னா பிரைம் சீனியர் திட்டம் என்ற ஒரு பிரத்யேக தீர்வையும் கொண்டுள்ளது, எனவே அவர்கள் வாழ்க்கையின் பொன்னான ஆண்டுகளில் தரமான உடல்நல பராமரிப்பு சேவையை அணுகலாம். மற்றொரு குறிப்பிடத்தக்க தீர்வானது, நீரிழிவு, உடல் பருமன், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட திட்டத்தையும் கொண்டுள்ள மணிப்பால் சிக்னா ப்ரோ ஹெல்த் பிரைம் ஆகும்.

ப்ராடக்ட்ஸ் இன் தலைவர் ஆஷிஷ் யாதவ் மேலும் கூறுகையில், “மணிபால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் இல், லைஃப்டைம் ஹெல்த், பிரைம் சீனியர் போன்ற பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளின் வளர்ச்சியடைந்து வரும் உடல்நல பராமரிப்பு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல, துறையின் முதல் அம்சங்களுடன் வரும் மற்றவைகளுடன், உடல்நல காப்பீட்டு திட்டங்களை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இன்று அனைத்து பிரிவுகளிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர் சேர்க்கை அனைத்தும் 100% எந்த காகித வேலையும் இல்லாமல் டிஜிட்டல் முறையில் உள்ளது.

எங்களின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் செயலி மற்றும் சாட் போட் ஆகியவை எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு 24/7 மற்றும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எங்கள் சேவைகளைப் பெற உதவுகிறது. மணிப்பால் சிக்னாவில் உள்ள நாங்கள், மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் தரமான உடல்நல பராமரிப்புக்கான அணுகல் கிடைப்பதை அறிந்து, முழுமையான மன அமைதியுடன் அவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ உதவுவதற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம்.”என்று கூறினார்.

தனிநபர்களின் குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்கிற மற்றும் சுகாதார நிதியுதவிக்கான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரிவான காப்பை வழங்கும் புதுமையான மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட திட்ட தீர்வுகளுடன், மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ், இந்தியாவில் நம்பகமான சுகாதார காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக தனித்து நிற்கிறது.

மணிபால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸின் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்: https://www.manipalcigna.com/health-insurance