June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தமிழகத்தில் 70.90 சதவிகித வாக்குப்பதிவு

by on April 18, 2019 0

தமிழகம், புதுவையில் 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.    இரவு 9 மணி நிலவரப்படி வெளியான வாக்குப்பதிவு நிலவரத்தில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.   “அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. […]

Read More

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை மகிழவைத்த சிவகார்த்திகேயன்

by on April 17, 2019 0

இயக்குனர்கள் பொன்ராம், எம்.பி.கோபியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ‘ஸ்டூடியோகிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ படப்பிடிப்பில் மதிய விருந்தும் விருதும் […]

Read More

10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடினார் ஜேசுதாஸ்

by on April 16, 2019 0

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது இளையராஜா இசையில் அமைந்த ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட ஒத்துக்கொண்டு பாடியும் கொடுத்திருக்கிறார் என்பது படத்துக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாகியிருக்கிறது. விஜய் ஆண்டனி நாயகனாகும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் […]

Read More

சினிமாவை மிஞ்சும் மோசடி முயற்சி – ஔடதம் தயாரிப்பாளரின் கண்ணீர்க்கதை

by on April 15, 2019 0

கடந்த நான்கு மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த ‘ஒளடதம்’ திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்றுள்ளது. எதற்கு தடை..? எப்படி விடுதலை..?   புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர்  கண்ணீருடன் தன் அனுபவத்தைக்  கூறினார். அது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது. நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றிய கதை இதுதான்.   ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு […]

Read More