April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Tag Archives

வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு

by on April 10, 2020 0

படத்தில் மட்டும்தான் எதையும் சாதிக்க வல்லவர்கள் நம் ஹீரோக்கள் என்பதை பேரிடர் காலங்களில் நாம் நன்றாகவே உணர்ந்து வந்திருக்கிறோம். ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று அமைதியாகவே இருந்து வருகிறார்கள்.  இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளிலும் தன் பென்ஷன் பணத்தையெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மையுள்ள மனித தெய்வங்கள் வாழும் நாட்டில் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு “உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே…” என்று வார்த்தை […]

Read More

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு – முதல்வர்

by on April 9, 2020 0

சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை […]

Read More

நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்

by on April 6, 2020 0

கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்தியத் […]

Read More

இந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா ?

by on April 6, 2020 0

பாரதப் பிரதமர் இந்திய மக்களிடையே நமது ஒற்றுமையை காட்டும் வகையில் நேற்று (9 ஆம் தேதி) வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிரச் செய்யும் படி வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா நேற்று அதே 9 மணிக்கு ஒரு வீடியோவை ஷேர் செய்தார். அதில் அவர் இருட்டில் தன் […]

Read More

புடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்

by on April 5, 2020 0

புடிச்சா பண்ணு, புடிக்கலயா கிளம்பு! நசநசனு பெரிய நாசா விஞ்ஞானி கணக்கா கருத்து சொல்லிக்கிட்டு!  கை தட்டுதல், விளக்கு ஏற்றுதல், இவையெல்லாம் உணர்வின் வெளிப்பாடு. எண்ணம் ஒன்றுபட்டால் யாவும் நிகழும் என்ற நம்பிக்கை சார்ந்த செயல்கள்! பல மதங்களில் இருக்கு! பகுத்தறிவாதி என்று மார் தட்டுபவர்களும் நினைவுநாள் அன்று தலைவர்கள் படம், சமாதி முன் பூத்தூவி விளக்கேற்றுதல், பிறந்தநாள் அன்று விளக்கேற்றுதல் என்று இதெல்லாம் ஒரு மரபாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது! இப்படி நம் அன்றாட வாழ்வில் […]

Read More

கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து

by on April 3, 2020 0

கொரோனா விடுமுறை ​​​​கொண்டாட்டமல்ல; ​​​​கிருமி ஞானம். ​​​​கன்னத்திலறைந்து ​​​​காலம் சொல்லும் பாடம்! ​​​​ஊற்றிவைத்த கலத்தில் ​​​​உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் ​​​​அடங்கிக் கிடப்போம் ​​​​அரசாங்க கர்ப்பத்தில் ​​​​இது கட்டாய சுகம் ​​​​மற்றும் விடுதலைச் சிறை ​​​​மரணம் வாசலுக்கு வந்து ​​​​அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் ​​​​காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும் ​​​​ஓசைகளின் நுண்மம் புரிவதே ​​​​இந்த ஊரடங்கில்தான் ​​​​இந்தியப் பறவைகள் ​​​​தத்தம் தாய்மொழியில் பேசுவது ​​​​எத்துணை அழகு! ​​​​நீர்க்குழாயின் வடிசொட்டோசை ​​​​நிசப்தத்தில் கல்லெறிவது ​​​​என்னவொரு சங்கீதம்! ​​​​தரையில் விழுந்துடையும் ​​​​குழந்தையின் சிரிப்பொலிதானே ​​​​மாயமாளவ […]

Read More

வீடுகளில் விளக்கேற்ற சொன்ன பிரதமர் பேச்சை நையாண்டி செய்த கமல்

by on April 3, 2020 0

கொரோனா நடவடிக்கைகளுக்காக மூன்றாவது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒளிஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமீப காலமாக பிரதமர் பேச்சுகளை அதிகமாக விமர்சிக்கும கமல் பிரதமரின் இந்த பேச்சு குறித்தும் நையாண்டி செய்திருக்கிறார். அது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில்… “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் […]

Read More

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

by on April 3, 2020 0

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:- வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது.  மக்கள் சமூக இடைவெளியை […]

Read More

கொரோனா நிதி திரட்ட எஸ்பி பாலசுப்ரணியம் மேற்கொள்ளும் இசை வழி

by on April 2, 2020 0

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் ( https://www.facebook.com/SPB/) அந்த வீடியோவைப் பதிவிடுகிறார் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அவரவர் விருப்பப் பாடல்களைப் பாடுகிறார். மார்ச் 31 வரை சுமார் […]

Read More

ஏப்ரல் 14 க்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

by on April 1, 2020 0

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சரியான உணவு கிடைக்காமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர்.   தமிழகத்தில் உள்ள அம்மா உணவங்கள் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன.    இந்நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.   உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். […]

Read More