அங்கீகாரம் படத்தின் வெற்றி விழா..! முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. […]
Read Moreமுதல் பாகம் வெற்றியடைந்த பெரும்பாலான படங்களின் இரண்டாவது பாகம் பெரிய வெற்றி பெறாமல்தான் இருந்திருக்கின்றன. பாகுபலி போன்ற சில படங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்த வரிசையில் இணைந்து கொள்கிறது இந்தப் படமும். அதுவும் முதல் படம் முடிந்த இடத்தில் இருந்து இந்த இரண்டாவது பாகமும் தொடங்குகிறது. நாயகன் விஷ்ணு விஷால் – நாயகி ஐஸ்வர்யா லஷ்மிக்கு பெண் குழந்தை பிறந்திருக்க, ‘குழந்தையை வைத்துக்கொண்டு இனிமேல் எங்கே விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவது..?’ என்ற மனநிலையில் இருக்கிறார் ஐஸ்வர்யா […]
Read More39 வருடங்களுக்கு முன் ஒரு உலக முயற்சியாக உலக நாயகன் கமலவை வைத்து வசனமே இல்லாமல்… ஆனால் பேசும் படம் என்று ஒரு வித்தியாசமான படத்தை எடுத்து பேச வைத்த இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் இத்தனை வருடங்கள் கழித்து, என்பது கடந்த தன் வயதில் இன்னும் ஒரு புதிய முயற்சியாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். அதில் வசனமே இல்லாமல் இருந்தது போல் இந்த படத்தில் வசனங்கள் எல்லாமே பாடலாக இருக்கின்றன. இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ள எவ்வளவு […]
Read Moreசமூக.விரோதச். செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட பழங்குடியின மக்களைக் காப்பாற்றப் போராடும் நாயகனின் கதை. யானைகளின் தந்தங்களை இலங்கைக்குக் கடத்தும் வேலையைச் செய்து வருகிறார் சுனில். அதில் தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அந்த வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியின மக்களையும் தன் அடிமைகளாக வைத்து தந்தக் கடத்தல் வேலையைச் செய்து வருகிறார். ஆனால், அந்தக் கடத்தல் வேலையைத் தன் வசப்படுத்த நினைக்கும் அரசியல் செல்வாக்குள்ள கபீர் துகான் சிங், ஒலியின் உதவியுடன் சுனில் கடத்தும் தந்தங்களைப் பிடிக்கிறார். […]
Read Moreமம்பட்டியான் திரைப்படத்தின் முரட்டுத்தனமான மண் வாசனையையும், கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும் நினைவூட்டும் வகையில் உருவாகியிருக்கும் இந்த மம்பட்டியான் ஸ்டார்ஸ் தொடர், ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை சமநிலையுடன் கலந்து வழங்க முயற்சிக்கிறது. கதை நகரும் விதத்தில் கிராமத்து அரசியல், நட்பு, துரோகம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகள் முக்கிய இடம் பெறுகின்றன. தொடக்க எபிசோடுகள் சற்று மெதுவாக நகர்ந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளில் திரைக்கதை வேகம் பெறுகிறது. சில திருப்பங்கள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், சில காட்சிகள் எதிர்பாராத தாக்கத்தை […]
Read More“அங்கீகாரம்” என்பது வெறும் சமூகப் பிரச்சினையைப் பேசும் படமாக இல்லாமல், ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏங்கும் அங்கீகாரம் என்ற உணர்வை மையமாகக் கொண்டு நகரும் உணர்வுப்பூர்வமான படைப்பு. கதையை சொல்லியிருக்கும் விதம் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கிறது. தனிமனித போராட்டமாக மட்டுமில்லாமல் சமூக உறவுகள், சுயமரியாதை எல்லாம் கலந்த திரைக்கதை, கதையாக சொல்லுவதற்கே பயன்பட்டுள்ளது. கதை இப்படிப் போகிறது… விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள […]
Read More‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மாதிரி ‘போற போக்குல ரெண்டு காதலு’க்கு ஆளாகிறார் நாயகன் சனத். ஜெய்ப்பூரில் தொடங்குகிறது கதை. அங்கே தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றுகிறார் நாயகன் சனத். அவர் மீது ஐடி துறையில் பணியாற்றும் இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், “நோ.!” சொல்கிறார் சனத். அதற்கு அவர் சொல்லும் காரணம் அவரது முதல் காதலின் பிரிவு. அது ஏற்படுத்திய வலியை மீண்டும் தன்னால் அனுபவிக்க முடியாது என்று இமயாவின் காதலை மறுக்கிறார் அவர். ஆனால் […]
Read More