August 25, 2026
  • August 25, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

விஜய் படங்கள் இயக்குநரின் வேதனைப் பதிவு

by by Aug 27, 2019 0

விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே…
 
“கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு….

Read More

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை

by by Aug 16, 2019 0

ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது.

இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி…

Read More

நேர் கொண்ட பார்வைக்கு நெல்லை டெபுடி கமிஷனர் வாழ்த்து

by by Aug 12, 2019 0

படத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் திரு. அர்ஜுன் சரவணன்.
 
அத்துடன் காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றும்…

Read More

ஆவின் பால் விலை விரைவில் உயர்கிறது

by by Aug 2, 2019 0

பொது மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாலை விற்பனை செய்யும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் விலையை கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன்பின் ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை.

ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளதாகவும், தீவனம் விலை அதிகரித்துள்ளதால் மாடுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள்…

Read More

சரவண பவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

by by Jul 18, 2019 0

சரவண பவன் ஓட்டல்களின் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

முன்னதாக, சரவண பவன் ராஜகோபாலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். அப்போது நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே ராஜகோபாலின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

அதனால், ஸ்டான்லி…

Read More

விவிஐபிக்கள் தயவில் அத்திவரதர் தரிசனம் வீடியோ

by by Jul 17, 2019 0

காஞ்சிபுரம் அத்தி வரதரை பொது மக்களிலிருந்து விவிஐபிக்கள் வரை தினமும் சென்று தரிசித்து வருகிறார்கள். அதில் முக்கிய விவிஐபி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 

கடந்த ஜூலை 12ம் தேதி அவர் அத்திவரதரை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவரை வீடியோ படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதில் அந்த வீடியோ வெளியானது. தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர் குடும்பங்களும் சென்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

அதில் அவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகளில் நாமும் அத்திவரதரை…

Read More

தமிழ்நாட்டு தயாரிப்பு என்றால் மட்டமாக நினைக்கிறார்கள் – ஆர்கே

by by Jul 9, 2019 0

எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள…

Read More

உலகின் ஆபத்தான 7 சிகரங்களில் ஏறி இந்திய பெண் ஐபிஎஸ் அதிகாரி சாதனை

by by Jun 30, 2019 0

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அபர்ணா குமார் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். நாற்பத்தைந்து வயதான இவர் இரு குழந்தைகளின் தாயாக இருக்கும் நிலையிலும் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கடந்த 2014-ம் ஆண்டில் மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவாலான முயற்சியில் ஈடுபட்டார்.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதத்தில் அண்டார்டிகாவில் உள்ள மலைச் சிகரத்தை மைனஸ் 37 டிகிரி…

Read More

விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்

by by Jun 25, 2019 0

நேற்று நடைபெற்ற ‘பாஸ்போர்ட் சேவா திவாஸ்’ எனும் விழாவில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மந்திரி பொறுப்பு ஏற்று முதன்முறையாக இவ்விழாவில் உரையாற்றி சிலருக்கு விருதுகளும் வழங்கினார். அப்போது அவர் பேசியதிலிருந்து…

“பாஸ்போர்ட்டுகளில் பாதுகாப்பு கருதி புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முய்ற்சிகளில் பாஸ்போர்ட்டில் ‘சிப்’ ஒன்றை பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இந்த சிப் பொருத்திய புதிய ‘இ-பாஸ்போர்ட்’ நடைமுறைக்கு வரும். தற்போது ஆண்டிற்கு 1 கோடி பாஸ்போர்ட்டுகளை மத்திய…

Read More

இன்னும் 10 நாள்களுக்கு மட்டுமே வீராணம் தண்ணீர்

by by Jun 22, 2019 0

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வரும் வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது கீழணை தண்ணீர் இன்றி வறண்டதால் கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

வீராணம் ஏரி அமைந்துள்ள லால்பேட்டையில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய நிலையில் 42.92 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

கடந்த சில…

Read More