March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகுமார் மீது வழக்குப் பதிவு – திட்டமிட்டு தாக்கப் படுகிறதா சூர்யா குடும்பம்?
June 6, 2020

சிவகுமார் மீது வழக்குப் பதிவு – திட்டமிட்டு தாக்கப் படுகிறதா சூர்யா குடும்பம்?

By 0 549 Views

பொது ஊரடங்கு வந்தாலும் வந்தது எதை பிரச்சனைக்கு உள்ளாகலாம் என்று அலைபவர்களுக்கு தோதான நேரம் கிடைத்திருக்கிறது.

யாரோ எப்போதோ பேசிய பேச்சுக்களை எல்லாம் தோண்டி எடுத்து அதன் மீதான விமர்சனங்களையும் தாக்குதல்களையும் தொடர்வது இப்போது வாடிக்கையாகி வருகிறது.

அதிலும் சிலர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள் அதில் சூர்யாவின் குடும்பம் ஒன்று.

ஒரு படத்தில் விழாவில் ஜோதிகா தஞ்சாவூர் கோவில் பற்றி பேசிய பேச்சை தூசு தட்டி எடுத்து பெரிதுபடுத்தி பிரச்சனைக்கு உள்ளாக்கினார்கள். விஷயம் தெரிந்தோர் அப்படி செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினாலும் பிரச்சனையை கையில் எடுத்தவர்களுக்கு அதன் மூலம் ஒரு புகழ்பெற்ற ஒழுக்கமான குடும்பத்தின் பெயரை கெடுக்கும் யுத்தி ஆகவே அது அமைந்தது.

அந்தப் பிரச்சனை ஓய்ந்த நிலையில் இப்போது இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் சிவகுமார் பேசிய பேச்சு ஒன்றின் வீடியோவை எடுத்து பிரச்சனைக்கு உள்ளா க்குகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் சிவகுமார் பேசிய பேச்சில் திருப்பதியில் பொதுமக்களுக்கும் அதிகாரத்தில்  உள்ளவர்களுக்கும் எவ்வாறு தரிசனம் வேறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

அதை இப்போது பெரிதுபடுத்தி திருப்பதி தேவஸ்தானம் அவர்மீது வழக்கு தொடர்ந்து இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து சூர்யா குடும்பத்தை பற்றி ஆன்மிக விஷயங்களிலேயே தாக்குதல் நடந்து கொண்டிருப்பது ஏதோ ஒரு பின்னணி இருப்பதையே காட்டுகிறது.

ஒழுக்க சீலர் ஆன சிவகுமார் இந்தப் பிரச்சனையில் இருந்து எளிதாக மீண்டு விடுவார் என்று நம்பலாம்.