July 6, 2025
  • July 6, 2025
Breaking News

Tag Archives

ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா 46 ‘ பட பூஜை..!

by on May 19, 2025 0

*சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது* ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் […]

Read More

சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசளித்த சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்*

by on May 9, 2025 0

*ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு* 2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் […]

Read More

ரெட்ரோ வெற்றி ; மீடியாக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

by on May 8, 2025 0

“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு ! முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.   இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், […]

Read More

ரெட்ரோ திரைப்பட விமர்சனம்

by on May 1, 2025 0

படத்தின் தலைப்பே இது எந்த வகைப் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதைத் தாண்டி யோசித்தால் கிட்டத்தட்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லாப் படங்களுமே பெரும்பாலும் அந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பது புரிகிறது. தன் அடையாளம் தெரியாத ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதைக் கண்டுபிடித்து அடிமைப்பட்டிருக்கும் தன் இனத்தை மீட்டெடுக்கும் கதை. அத்துடன் சிரிக்கவே தெரியாமல் இருந்தவர் காதல் பூத்து தன் புன்னகையையும் மீட்டெடுக்கிறார். அந்த வேடத்தைத் தாங்கி நிற்பவர் சூர்யா என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா..? சூர்யாவுக்கு […]

Read More

அகரம் ஃபவுண்டேஷனின் புதிய கட்டிடம் புது நம்பிக்கையை தந்திருக்கிறது – சூர்யா

by on February 18, 2025 0

அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா  சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார்.  கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா அவர்கள் பேசியதாவது, […]

Read More

பாலா 25 – வணங்கான் இசை வெளியீடு – கோலாகலமான இருபெரும் விழா

by on December 19, 2024 0

25வது ஆண்டு திரையுலக பயணத்தில் இயக்குநர் பாலா ; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்* 1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், […]

Read More

கங்குவா திரைப்பட விமர்சனம்

by on November 15, 2024 0

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவை ஒரு பான் இந்திய ஸ்டாராக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து மிரட்டி இருக்கும் படம். 

1070 இல் ஆரம்பிக்கும் கதை 2024 இல் வந்து இப்போதைக்கு முற்றுப்பெறுகிறது.  அது எப்படி என்பதை இரு வேறு காலகட்ட சுவாரஸ்யத்துடன் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா.

தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் சூர்யா ஒரு பிளேபாயாகவும், காவல்துறை நேரடியாக பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் Bounty hunter ஆகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட அதே டூட்டியில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக வருகிறார் திஷா பதானி.

இவர்கள் இருவருக்கும் முறையே அல்லக் கைகளாக யோகி பாபுவும், ரெடின்ஸ் கிங்ஸ்லியும் வருகிறார்கள். இவர்கள் செய்யும் அலப்பறைக்கு இடையில் ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சி முகாமில் இருந்து தப்பிய சிறுவன் ஒருவன் குறுக்கிட அந்தச் சிறுவன் மீது சூர்யாவுக்கு ஒரு இனம் புரியாது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் வேளையில் கடந்த வரலாற்றுக் காலத்தில் நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வருகின்றன. அதன் முடிவு என்ன என்பது மீதிக்கதை.

ஆனால் அது முடியவில்லை. இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பது உலகறிந்த விஷயம்தான்.

பிளேபாய், ஆக்ஷன் ஹீரோ, பாசக்கார மனிதன் என்று எல்லா வித ரசிகர்களையும் கவர பலமுகம் காட்டி படம் முழுவதும் உணர்ச்சிமயம் காட்டியிருக்கிறார் சூர்யா. 

அதுவும் 1070 காலகட்டத்தில் ஒரு பழங்குடிகளின் இனத் தலைவரின் மகனாக தங்கள் இனத்தை அழிக்க வந்த கருங்காலி நட்டியை தண்டிக்கும்போது காட்டும் கண்டிப்பில் ஆகட்டும், அதன் விளைவாக நட்டியின் மகன் அனாதையாக, அவனை அக்கணமே தந்தையாகத் தத்தெடுத்துக் கொள்ளும் பாசத்தில் ஆகட்டும், அத்தனைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தும், அவனே ஒரு கட்டத்தில் தன்னைக் கொல்ல முயலும் போது கண்களில் காட்டும் பரிவு கலந்த ஏமாற்றத்தில் ஆகட்டும், அந்தச் சிறுவனுக்காக தன் இனத்தைத் துறந்து காட்டுக்குள் தனிமைப்பட்டுப் போவதிலாகட்டும்… நடிகர் திலகத்தின் மிச்சமாக நடிப்பைக் கொட்டி இருக்கிறார் சூர்யா.

அவர் மட்டும் அல்லாமல் எல்லா பாத்திரங்களும் படம் நெடுக போடும் காட்டுக் கத்தலை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆயிரம் வருடங்கள் பயணப்படும் இத்தனை நீளமான படத்தில் அவருக்கு ஒரு சரியான ஜோடி இல்லாமல் இருப்பது குறைதான். தற்காலத்தில் நடக்கும் கதையில் மட்டும் திஷா பதானி ஒரு ஆறுதலாக கொஞ்ச நேரம் வந்து போகிறார்.

படம் நெடுக சூர்யாவே ஆக்கிரமித்திருப்பதில் வில்லனாக வந்திருக்கும் பாபி தியோலின் நடிப்புக்குப் பெரிய பங்கு இல்லை.

நட்டி, போஸ் வெங்கட், பிரேம் உள்ளிட்ட எல்லோருக்கும் நெகடிவ் வேடங்கள்தான். அவர்களில் கருணாஸ் மட்டும் பாசிட்டிவாக வருகிறார். 

கே எஸ் ரவிக்குமார், கோவை சரளா இருவரும் வழக்கமாகப் பேசும் கோவைத் தமிழை மாற்றி கோவா தமிழ் பேச வைத்திருப்பது ரசிக்கும்படி இல்லை.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி இருவராலும் நம்மைச் சிரிக்க வைக்க முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான்.

வெற்றியின் ஒளிப்பதிவு உச்சம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தேவைக்கு அதிகம் என்கிற நிலையில் கலை இயக்கம், அனிமேஷன் உள்ளிட்ட நுட்பங்கள் தமிழுக்கு உச்சபட்சம்….

அதிலும் முழுமையான முதல் இந்திய 3டி படமாக வந்திருப்பது அனைத்து இந்திய ரசிகர்களையும் ஈர்க்கும். 

கடைசி கடைசியாக கார்த்தியும் உள்ளே வந்து அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறார்.

சத்தத்தை மட்டும் குறைத்திருந்தால் சவுண்டான படமாக இருந்திருக்கும். 

கங்குவா – தொழில்நுட்ப மிரட்டல்..!

 

Read More

மன்னிப்பின் உயர்வைப் பேசும் படம் கங்குவா..! – சூர்யா

by on November 7, 2024 0

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது! ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை […]

Read More

என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் – சூர்யா

by on October 29, 2024 0

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14- ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சனியன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை […]

Read More

என்னைப் பெருந்தன்மையாக இருக்கச் சொன்னார் அண்ணன் சூர்யா – கார்த்தி பெருமிதம்

by on October 6, 2024 0

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து […]

Read More