June 26, 2026
  • June 26, 2026

தனிமைப் படுத்தப்பட்ட கமல் குடும்பம் – கொரோனா முன்னெச்சரிக்கை

by on March 25, 2020 0

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா  முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். “இந்த நிலைமை கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் […]

Read More

மஞ்சிமாவை குந்தாணி ஆக்கிய ரசிகர்கள்

by on March 25, 2020 0

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21நாட்கள் ஊரடங்கி வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்கள். இதற்காக பல நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளங்களில் எல்லா மக்களையும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர். அதே வழியில் நடிகை மஞ்சிமா ” 21 நாட்களுக்கு மட்டும் உங்களை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருங்கள். அது தான் உங்களுக்கு பாதுகாப்பு…” என்று ஒரு டிவிட் போட, அதற்கு ரசிகர் ஒருவர், “அடியேய் […]

Read More

யோகிபாபு திருமண வரவேற்பு எப்படி நடக்கும்..?

by on March 25, 2020 0

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. அது ரகசியமாக குலதெய்வம் கோவிலில் நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார்.  அதற்காக ஏப்ரல் 5-ம்தேதியை அவர் நிச்சயித்தார். பல பேருடன் கலந்து ஆலோசித்து சென்னையின் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டலில் வைத்து திருமண வரவேற்பு நடத்துவதாக இருந்தது.  அதனால், கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தன் திருமண வரவேற்பு அழைப்பிதழை விஐபிகளுக்கு நேரிலேயே சென்று வழங்கி […]

Read More

வீட்டில் அடைபட்ட மனிதர்களும் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளும் – நமீதாவின் கவலை

by on March 24, 2020 0

கரோனா வைரஸ் பரவலைக் குறைக்க நாடு முழுவதும் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நகரங்கள் யாவும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மனிதர்கள் வீட்டில் அடைப்பட்டு இருப்பதையும் பல்வேறு விலங்குகள் உயிரியல் பூங்காக்களில் அடைப்படு கிடப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா வேதனைப்பட்டுள்ளார். இது குறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்… ”புரிஞ்சுக்கோங்க… நான் எப்போதும் இந்த உயிரியல் பூங்காக்களை ஆதரிச்சது […]

Read More

நடிகர் சங்க நடிகர் நலனுக்கு ஐசரி கணேஷ் 10 லட்சம் உதவி

by on March 24, 2020 0

நடிகர் சங்கத்தின் முன்னாள் அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகன் சிறப்பு அலுவலருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “நடிகர் சங்கத்தில் 90 சதவீத உறுப்பினர்கள் அன்றாடம் நடைபெறும் சினிமா படப்பிடிப்புப் பணிகளையே நம்பி இருப்பவர்கள். இவர்கள் வேலை நிறுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்சி சார்பில் இன்று பெரிய நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு உதவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. அதுபோலவே நமது சங்கம் […]

Read More

சூர்யா கார்த்தி சிவகுமாரைத் தொடர்ந்து பெப்ஸிக்கு சிவகார்த்திகேயன் உதவி

by on March 23, 2020 0

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் முதல் மார்ச் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்ஸியைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர். அவர்களில் 15,000 பேரின் வாழ்வாதாரம் அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே என்று இருக்க, டிவி தொடர்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு விட மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதனால் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி இன்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவினால் வளர்ச்சி […]

Read More

நிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்

by on March 23, 2020 0

கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்: “சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை. சென்னை மாநகரப் […]

Read More
CLOSE
CLOSE