July 11, 2025
  • July 11, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்

by on April 30, 2018 0

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதி மன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதற்கு இன்னும் மூன்று […]

Read More

தமிழகத்தில் 1300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

by on April 30, 2018 0

நெடுஞ்சாலையை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாத பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 1,300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன் பின்னணி… தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் […]

Read More

காலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு

by on April 28, 2018 0

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்து பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ ஏப்ரலில் வெளியாகவிருந்து பின்னர் வேலை நிறுத்தத்தினால் தள்ளிப்போய் இப்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக நடந்தேற வேண்டிய ‘காலா’ படத்தின் இசை வெளியீடு எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கிறது தனுஷ் இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட். அதில் ‘காலா’ படத்தின் இசை வெளியீடு மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அதில் அறிவித்திருக்கிறார் அவர். சந்தோஷ் நாராயணன் […]

Read More

பிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி

by on April 28, 2018 0

தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து… “இங்கு சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே பிரச்சினையில் இரண்டு விதமான தீர்ப்பு வந்திருப்பதற்கு மக்கள் மன்றம்தான் பதில் […]

Read More

சேவைக் கட்டணம் வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் – ராமதாஸ்

by on April 28, 2018 0

இந்தியாவில் அனைத்து வங்கி சேவைக்ளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்து வருவதாக வந்த செய்தியை அடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகங்கள், பற்று அட்டைகள், அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை வங்கிகள் செயல்படுத்தினால் அது வணிக வங்கிகளின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும். பொதுத்துறை மற்றும் தனியார் […]

Read More

நடிகையர் திலகம் படத்தில் எனக்கு 120 உடைகள் – கீர்த்தி சுரேஷ்

by on April 27, 2018 0

‘நடிகையர் திலகம்’ என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பட்டப் பெயரிலேயே வைஜெயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா தயாரிக்கிறது. நாக் அஷ்வின் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாகிறார். அவருடன் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா, பிரகாஷ் ராஜ், மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் அஷ்வின், நடிகை கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, படத்தை […]

Read More

ஆட்சி அமைக்க அழைத்தும் மறுத்த பிட்டி தியாகராயர்

by on April 27, 2018 0

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மும்மூர்த்திகள் டாக்டர்சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆவர். இந்தப் பெருமக்களை திராவிட இனம் உள்ளவரைக்கும் தமது இதயப் பேழையில் பொன்னெழுத்துகளால் இந்த முப்பெரும் முத்துக்களாகப் பொறித்து வைப்பர் என்பதில் அய்யமில்லை. 1920 சட்டப்பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றும், அதன் தலைவரான பிட்டி தியாகராயரைத் தலைமையேற்று ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைத்தும், சென்னை மாநில பிரதமர் பதவியை (அப்பொழுது அவ்வாறு தான் அழைக்கப்பட்டது) தான் ஏற்காமல், தன் கட்சியைச் சேர்ந்த […]

Read More

ஹர்பஜன் சிங்கை பாரதியாக்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

by on April 27, 2018 0

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாட வந்தாலும் வந்தார். தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவரைக் குறித்த மீம்ஸ்களும் எப்போதும் சமூக வலை தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று முந்தினம் பெங்களூருவுடன் நடந்த ஐபிஎல் போட்டியில் போராடி கடைசி நேரத்தில் கேப்டன் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சிஎஸ்கே. இது குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சு கட்றதா… […]

Read More