ஏ.ஆர்.முருகதாஸும் இன்றைக்கு செய்திகளை உருவாக்குபவர் ஆகிவிட்டார். அவர் நின்றாலும் செய்தி… நடந்தாலும் செய்தி என்று ஆகிவிட்ட நிலையில் நேற்று அவர் காஞ்சி காமாட்சி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்தார். அதன் காரணமாகக் கூறப்படுவது ‘சர்கார்’ படத்தின் வெற்றிக்காக என்றுதான். ஆனால், ‘சர்கார்’ கதைப் பிரச்சினை சாதகமாக அமைய வேண்டிக் கொண்டதன் அடிப்படையிலும் அவர் கோவிலுக்கு வந்ததாக ஒரு வட்டாரம் செய்தி சொல்கிறது. எப்படியோ எல்லாம் ‘சர்கார்’ சம்பந்தமாகத்தான் வந்து வழிபாடு நடத்திச் சென்றிருக்கிறார் ஏ.ஆர்.எம். ஆனால், அவர் […]
Read Moreஒவ்வொரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை மூலதனமாக்கி தியேட்டர்காரர்கள் டிக்கெட்டின் விலையைக் கணிசமாக உயர்த்தி அநியாய லாபம் பார்த்துவிடுகிறார்கள். ரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் ஆதர்ச ஹீரோவின் படத்தை முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடத் துடிக்கிறார்கள். இப்போது தீபாவளி ரிலீசாக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ வெளியாகும் நிலையில், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை […]
Read Moreஇது காப்பியடித்த கதைகளுக்கு காப்புரிமை கோரும் சீசன். ‘சர்கார்’ கதை சமரசத்துக்கு வந்த நேரத்தில் ’96’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். பாரதிராஜாவும் அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி […]
Read Moreபடத்தின் தலைப்பையும், இதற்கான புகைப்படங்களையும் பார்த்துவிட்டு “இந்தப்படத்துக்கெல்லாம் விமர்சனம் அவசியமா..?” என்ற கேள்வி எழலாம். படம் பார்க்கும்வரை அதே நினைப்புதான் இருந்தது. ஆனால், பார்த்து முடித்தவுடன் ஏற்பட்ட விளைவு வேறு… மேலே படியுங்கள்..! படம் எப்படிப்பட்டது என்று தலைப்பிலேயே ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு…’ என்று வீச்சரிவாள் வீசியதைப் போல சொல்லி விட்டார் இயக்குநர் ‘நாகா’ என்கிற நாகராஜ். (நாகா என்ற பெயரிலும் நாகராஜ் (தினந்தோறும்) என்ற பெயரிலும் ஏற்கனவே இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் வேறு… […]
Read More‘அக்கூஸ் புரொடக்ஷன்’ சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்து ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’ . இப்படத்தின் பாடல்களை நடிகர் – இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் , கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர். விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது “இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது. இன்று ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ‘மீ […]
Read More