கமல் பாரதிராஜா இளையராஜாவுக்கும் பால்கே விருது வழங்க வைரமுத்து கோரிக்கை
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
பாலியல் புகார் தொடர்பில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது தெரிந்த விஷயம்.
தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரின் மருமகன் பாலியல்…
Read More
ரக்ஷன் சுனிதா ஜிபி முத்து இணையும் என்ன வாழ்க்கடா ஆல்பம்
SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார்.
23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.
தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம் பாடலாக இப்பாடல் வெளியாகிறது. இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில்…
Read More
லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதும் இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருவதும் தெரிந்த விஷயம்தான்.
அவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் அவ்வப்போது எழுந்து அடங்கும்.
அந்த வகையில் லதா ரஜினி பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் நேற்று ஆஸ்ரம் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய…
Read More
ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்
ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் கார்டுகளை வேறு வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்தும்போது பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 15-இலிருந்து ரூ. 17 ஆக உயருகிறது.
இதுவே பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 5-இலிருந்து ரூ. 6 ஆக உயருகிறது.
எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டுகளை மற்ற வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் மாதத்துக்கு மூன்று…
Read More
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆறு லட்சம் வழங்கிய ஈழத்தமிழ் சிறுவர்கள்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதியகத்திற்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இதனை அறிந்து, கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு 2009 ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையிலிருந்து தப்பித்து இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்கள் தமது சிறுசேமிப்புத்…
Read More
நெல்லூர் கொரோனா ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் – இன்றைய முக்கிய செய்திகள்
*தமிழகத்தில் முழுமுடக்க காலத்தில் குழந்தைத் திருமணங்கள் 40% வரை அதிகரிப்பு.
*கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000த்தை பெறாதவர்கள் ஜூனில் வாங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
*கொரோனா மரணங்கள்: ஈஷா பராமரிக்கும் 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம்.
*கர்நாடகாவில் இதுவரை 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 500க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு.
*தஞ்சாவூரில் சாலையில் செல்வோரை கத்தியை காட்டி மிரட்டி வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வைரலாக்கிய 4 பேர் கைது.
*தமிழகத்தில்…
Read More
பள்ளி பிரச்சினையில் என் சாதியை இழுப்பது ஏன்? – மதுவந்தி கேள்வி
பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் பத்மாசேஷாத்ரி பள்ளி சர்ச்சை குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி சொன்ன விளக்கம் –
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறதே… என் விளக்கம் என்ன? என்று கேட்கிறார்கள்்.
‘ராஜகோபால் என்பவர் ஸ்கூலில் ஒர்க் செய்யற ஓரு டீச்சர். அந்த வகையில் ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்றுதான் புகார் வந்துச்சு. ஆனால், இப்போ ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே…
Read More
கரிசல் இலக்கிய முன்னோடி கிரா மறைந்தார்
தமிழ் இலக்கிய உலகில் கரிசல் மண் சார்ந்தும் அதன் மக்களின் வாழ்க்கை சார்ந்தும் தனது படைப்பில் கொண்டு வந்ததவர் எழுத்தாளர் கிரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக பெருமை பெற்றிருப்பினும் அனைத்து வட்டார இலக்கியங்களுக்கும் இவரை முன்னோடி என்றே கொள்ளமுடியும்.
1922ஆம் ஆண்டு கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்த கி.ரா. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது வியப்புக்குரிய அம்சம். விவசாயத்தில் இருந்து தன் நாற்பது வயதில் இலக்கிய உலகுக்கு வந்தார்.
பள்ளிப்படிப்பை முடிக்காதவர்…
Read More
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பு – முக்கிய செய்திகள்
தமிழகத்தில் ஒரேநாளில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று – 144 பேர் உயிரிழப்பு.
சென்னையில் ஒரே நாளில் 6228 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.
ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர்.
இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீச வாய்ப்புள்ளது.பகுதி நேர, இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இருக்காது – எய்ம்ஸ் இயக்குநர்.
நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் திமுக…
Read More