ஆறாம் நிலம் திரைப்பட விமர்சனம்
ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவர்களைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் நிலை இன்னும் புரியாத புதிர்.
அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்றழைப்பதுதான். ஐநாவின் பார்வைக்கு இந்த விஷயம் கொண்டு போகப்பட்டும் அந்த விஷயம் சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. அந்த வேலையை இந்தச் சிறிய படம் செய்கிறது.
இந்த அரிய முயற்சியைத் திரைப்படமாக…
Read More
கலை உன்னதப் படுவதே அது மக்களுக்கானதாக ஆகும்போதுதான். நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் நூறு படங்களாவது இந்த வேலையைச் செய்தனவா என்று தெரியாது. அப்படிச் செய்திருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று நாடே முன்னேற்றம் கண்டிருக்கும்.