யாரோ படத்தின் விமர்சனம்
வழக்கமாக ஆவி கதைகள் எனப்படும் ஹாரர் வகைப் படங்கள் எல்லாம் சஸ்பென்ஸ் திரில்லராக ஆரம்பித்து கடைசியில் ஆவியில் வந்து முடியும். ஆனால் இந்தப்படத்தில் ஒரு ஹாரர் படம் போல ஆரம்பித்து கடைசியில் சஸ்பென்ஸ் திரில்லராக முடித்திருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய்.
சாயம் திரைப்பட விமர்சனம்
கொஞ்ச காலமாகவே தமிழ் சினிமாவில் சாதிப்பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் தென் மாவட்டப் பகுதியில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது.
ஊர்ப் பெரிய மனிதரான பொன்வண்ணனும், ஆசிரியர் இளவரசுவும் நல்லது செய்து தங்கள் ஊரில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் மகன்களும் நல்ல நண்பர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பொன்வண்ணன் மகனாக அபி சரவணன் வருகிறார்.
பொன்வண்ணனின் உறவினரான தென்னவனும், அவர் தம்பி போஸ் வெங்கட்டும் கூட…
Read Moreமுதல் நீ முடிவும் நீ திரைப்பட விமர்சனம்
எந்த ஒரு மனிதனும் முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அதேபோல் எந்த மனிதனின் முதல் காதலும் வெற்றி அடைந்ததாக பெரும்பாலும் காவியத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி பதிவுகள் அரிதாகவே இருக்கின்றன.
நாய் சேகர் திரைப்பட விமர்சனம்
சிலந்தி கடித்தால் ‘ஸ்பைடர் மேன்’ ஆக முடியும் என்றால், நாய் கடித்த சேகர் ‘நாய் சேகர்’ ஆக முடியாதா..? என்ற ‘கடி’தான் படத்தின் லைன்.
ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். அவரது முயற்சிகள் சாத்தியமில்லை என்று அவரை விஞ்ஞான கமிட்டி விலக்கி வைக்கிறது. எனவே வீட்டில் இருந்து கொண்டே ஆராய்ச்சிகளைத் தொடர்கிறார்.
ஜார்ஜின் அருகாமை வீட்டில் குடியிருக்கும் ஐடி ஊழியர் சதீஷை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் கடித்து விட,…
Read Moreஎன்ன சொல்லப் போகிறாய் திரைப்பட விமர்சனம்
சிறிது நாட்களுக்கு முன் நடந்த இந்த படத்தின் முன்னோட்ட விழாவில் 40 டைரக்டர்களிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவத்தை சொல்லி எல்லோரிடமும் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார் இந்த படத்தின் நாயகன் அஸ்வின் ( குமார் லஷ்மிகாந்தன்)
அவர் சொல்ல வந்தது இந்தப் படத்தின் கதை மட்டும்தான் தூங்காமல் கேட்டது என்பதைத்தான்.
ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நமக்கு தோன்றியது அஸ்வின் எவ்வளவு நாகரிகமானவர் என்று. காரணம் இந்தப்படமும் நம்மைத் தூங்க வைத்ததுதான். அப்படி சொல்லி விடக்கூடாது என்றுதான்…
Read Moreதேள் திரைப்பட விமர்சனம்
ஒரு அரக்கனின் மனதில் தாய்ப்பாசத்தை ஊட்டி அவனுக்கு அன்பின் வலியை உணர்த்தும் படம்.
இங்கு எடுக்கும் பல படங்களும் ஆங்கிலம், கொரியன் அல்லது இரானிய படங்களின் அப்பட்டமான காப்பிதான் என்றிருக்க, சிலர் மட்டுமே இங்கிருந்து உருவான கதை என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். அப்படி கொரிய மொழிப்படம் ஒன்றின் எடுத்தாளல் இது என்பதைச் சொல்லியே படத்தைத் தொடங்கும் இயக்குநர் ஹரிகுமாரின் மனசாட்சிக்கு முதலில் வந்தனம் சொல்லி விடலாம்.
கோயம்பேடு சந்தையில் தொடங்கும் படத்தில் காய் கனிகளைத் தாண்டி முக்கியமான தொழிலாக…
Read Moreகார்பன் திரைப்பட விமர்சனம்
கொஞ்ச காலமாகவே ஹாலிவுட்டை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் விஷயங்கள் தமிழ் சினிமாவிலும் வியாபித்து இருக்கின்றன.
டைம் லூப் எல்லாம் இங்கே எடுபடுமா என்ற தயக்கததை மாநாடு வெற்றி துடைத்து எறிந்தது. ஆனால் இது அதற்கும் முன்பு திட்டமிடப்பட்ட படமோ என்னவோ, டைம் லூப் என்று கமிட் செய்து கொள்ளாமல் நாயகன் காண்கிற கனவு எல்லாம் அப்படியே நடக்கும் என்ற நிலையில் அதை சரி செய்து கொள்ள முயலும் அவரது போராட்டமும் தான் கதை.
போலீசாக வேண்டும்…
Read Moreகொம்பு வச்ச சிங்கம்டா திரைப்பட விமர்சனம்
பொங்கலுக்கு ஒரு கிராமத்துப் படம் வராவிட்டால் எப்படி என்று வந்திருக்கும் படம்.
இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை.
நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார் பட பார்முலாவாக இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதில் சம்பந்தமில்லாமல் துருத்தலாக பெரியாரிஸமும் உள்ளே வந்திருக்கிறது.
இது சாதிப்படமில்லை என்பதற்காக பெரியாரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டுவந்தாலும் படத்துக்குள் சாதியும், மதமும்…
Read Moreசினம் கொள் திரைப்பட விமர்சனம்
உடலில் சிறிய காயம் பட்டாலே அது ஆற நாட்கள் பல ஆகின்றன. காயம் ஆறினாலும் அதன் வடுக்கள் காலப்போக்கில் நிலைத்திருக்கின்றன. என்றால் ஒரு போரின் வடுக்களும், போர் தந்த அதிர்வுகளும் எத்தனைக் காலம் நிலைத்திருக்கும்..? அதைச் சொல்ல வருகிறது இந்தப்படம்.
இலங்கையில் நடைபெற்ற போர் எத்தனை அப்பாவித்தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை உலகமே அறியும். அந்தப்போரில் பலர் சிறைப்பிடிக்கப்பட்டும், காணாமல் போயும் இருக்க, போரை அடுத்து ஈழம் எப்படி இருக்கிறது, தமிழர்களின் இன்றைய நிலை என்ன என்பதை…
Read Moreபூச்சாண்டி திரைப்பட விமர்சனம்
முழுக்க மலேசியாவில் தயாரான படம் இது. முற்றிலும் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிக, நடிகையர்களே நடித்திருக்கும் இந்தப்படத்தில் ஒரே தமிழ்நாட்டு நடிகராக இருக்கிறார் ‘மிர்ச்சி ரமணா ‘. அவரே கதையின் நாயகனாக இருக்கிறார்.
நாம் குழந்தையிலிருந்து அதிகம் கேள்விப் பட்டிருக்கும் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதைப் பற்றி நமக்கு தெரியாது. அதன் பொருளைப் பொதிந்து தமிழனின் சரித்திரப் பெருமைகளை ஆன்மிகம் தூவி புனைகதை ஆகவும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் ஆகவும் தந்திருக்கிறார் இயக்குனர் ஜேகே…
Read More