August 10, 2026
  • August 10, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

கவுண்டர் காமெடியை தலைப்பில் வைத்த சந்தானம்

by by Sep 6, 2019 0

சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘டிக்கிலோனா’. இந்த டிக்கிலோனா வார்த்தையை நினைவிருக்கிறதா..? நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் ‘ஜென்டில்மேன்’ படத்தில் பேசி ஒரு வரலாறையே ஏற்படுத்திய அதே பெயரை சந்தானம் படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்தவருமான ‘கார்த்திக் யோகி’ இப்படத்தை இயக்குகிறார். ‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் ‘சோல்ஜர்…

Read More

கார்ப்பரேட் கம்பெனிகளால் கதை திருட்டு நடக்கிறது

by by Sep 6, 2019 0

படைப்பாளன் படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது.

விழாவில்,

 இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,

“இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை. கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை.

இடம் பொருள் ஏவல் என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக்கதைக்கு நான் தயாரிப்பாளரிடம்…

Read More

எனை நோக்கிப் பாயும் தோட்டா டீம் முக்கிய அறிவிப்பு

by by Sep 5, 2019 0

பல முயற்சிகளுக்குப் பின் நாளை வெளியாகவிருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் இம்முறையும் ஏமாற்றி விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்த இந்தப் படம் நாளை வெளியாகாதது எல்லோருக்கும் ஏமாற்றமே.

இந்நிலையில் வெளியீடு எப்போது என்பது குறித்து படத்தைத் தயாரித்திருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். 

அந்த அறிவிப்பு கீழே…

Read More

விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா, ரெபா மோனிகா ஜான்

by by Sep 5, 2019 0

‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’  மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம் பதிக்கிறார்.

‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’,  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’,  உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள்  தலைமை இணை இயக்குனர் – நிர்வாக தயாரிப்பாளர்…

Read More

பிக்பாஸில் கொடுமை மதுமிதா போலீஸில் திடீர் புகார்

by by Sep 4, 2019 0

பிக் பாஸ் 3 சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

அத்துடன் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் ஒன்றை அளித்தது. அதில், மதுமிதா தனக்கு வர வேண்டிய பணத்தை உடனடியாக கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை அழைத்த மதுமிதா, தன் மீது விஜய்…

Read More

வசுந்தராவைப் பார்த்து பயந்த அப்புக்குட்டி

by by Sep 3, 2019 0

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘வாழ்க விவசாயி’.

விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி.

படம் பற்றிய அனுபவங்களை அப்புக்குட்டி பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது. இயக்குநர் பி.எல்.பொன்னிமோகன் சொன்ன…

Read More

சாஹோ 4 நாள் சாதனை 330 கோடி வசூல்

by by Sep 3, 2019 0

‘பாகுபலி’ மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ், ‘சாஹோ’விலும் அதைத் தொடர்ந்திருப்பதாகவே சொல்லலாம். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் ‘சாஹோ’ திரைப்படம் வசூல் சாதனைகள் படைத்து வருகிறது.

விமர்சன அளவில் கொஞ்சம் இறக்கம் இருந்தாலும் ‘சாஹோ’வை வெற்றிப்படமாகவே டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

வெளியான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த ‘சாஹோ’ இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது என்கிறார்கள். வசூலில் புயலாய் பாய்ந்த ‘சாஹோ’ இந்தியாவில்…

Read More

மிரட்டலுக்கு பயப்படாத இயக்குநரின் தைரியம்

by by Sep 2, 2019 0

நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் இப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் ஃபேஸ்புக் காதல் பற்றியும் முன்வைத்து ஒரு படம் உருவாகிறது. 

அந்தப்படத்துக்கு ‘கருத்துகளை பதிவு செய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ‘ராகுல் பரமகம்சா’ இயக்கியிருக்கிறார். 

ஆர்பிஎச் சினிமாஸ் சார்பாக மும்தாஜ் தயாரிக்கும் இந்தப்படத்தில் எஸ்எஸ்எஸ் ஆர்யன் நாயகனாகிறார். உபாசனா ஆர்.சி நாயகியாகிறார். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, ஒளிப்பதிவை மனோகர் ஏற்கிறார்.

படம் பற்றி இயக்குநர் ராகுல் பரமகம்சா கூறும்போது, “பேஸ்புக்கில் உள்ள அனைத்து…

Read More

எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி

by by Sep 1, 2019 0

‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து….

“நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். இப்போது விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும்…

Read More

8 வருடம் எழுதிய மகாமுனி அற்புதமாக வந்திருக்கிறது – ஞானவேல்ராஜா

by by Aug 31, 2019 0

‘ஸ்டூடியோ கிரீன்’ தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மகாமுனி’.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் பேசியதிலிருந்து…

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா –

“2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி…

Read More