தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாகவே இருக்கின்றன. அதில் சமீபத்திய கவலை தரும் செய்தி இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு கொரானா தொற்று உறுதியாகியிருக்கிறது. அதை அவரே அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் covid-19 டெஸ்ட் எடுக்கப்பட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். டுவிட்டரில் அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டிருப்பது “என்னுடன் கடந்த பத்து நாட்களில் எந்த விதத்திலாவது தொடர்பு கொண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக பரிசோதனைகளை மேற் கொள்ளுங்கள்…” என்பதுதான். அமிதாப் விரைவில் […]
Read Moreதற்போது ‘மாஸ்டர் ‘ உள்ளிட்ட படங்களிலும், ‘ரோஜா ‘ சீரியலிலும் நடித்து வருகிறார் பிரபல நடிகர் ராஜேஷ். நடிப்பைத் தாண்டி ஜோதிடம், ஆவிகளுடன் பேசுதல், Premonition போன்ற Parallel Science ல் ஏராள தரவுகள் வைத்திருக்கும் ராஜேஷ் இப் போதைய கொரோனா பிரச்சினை இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று தனக்குத் தெரிந்த ஜோதிடம் மூலம் ஆறுதல் வார்த்தை கூறுகிறார். “இந்த (ஜூலை) 16 ம் தேதி சூரியன் கடகத்திற்கு மாறுகிறது. அதன் பின் கொரோனா பிரச்னை […]
Read Moreதிரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார் அல்லவா? அதில் நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது அவர் 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டிச் […]
Read Moreஉலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரசை 6 மாதங்களைத் தாண்டியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தடுப்பூசியும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன. அதற்குள் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக எச்சரித்துள்ளது. அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம். அந்த, பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவிச்சிருக்குது. அதாவது கடந்த மாதம் […]
Read Moreசென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் காய்கறி, பூ, பழங்களின் தேவைகளை மட்டுமின்றி பல்வேறு அண்டை மாவட்ட மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்த கோயம்பேடு காய்கனி மற்றும் மலர் அங்காடிகள் கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டு, பழங்கள், மலர் அங்காடிகள் மாதவரத்திற்கும், காய்கறி கடைகள் திருமழிசைக்கும் மாற்றப்பட்டு சுமார் 70நாட்களை தொடவிருக்கிறது. சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் கோயம்பேட்டில் அமைந்திருந்த காய்கறி மற்றும் பழங்கள், மலர் அங்காடிகளை மூலைக்கு ஒன்றாக பிரித்ததிலும், ஊரடங்கு அமுலில் […]
Read Moreஇயக்குநர் விஜய முருகன் டைரக்ஷனில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார். படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தமிழ்க் கடவுளான முருகனின் தோற்றத்தில் யோகி பாபு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்கள். தற்போது காக்டெய்ல் திரைப்படம் ஜீ5 […]
Read Moreசாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது […]
Read Moreஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறாராம். அத்துடன் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தும் வருகிறாராம். இந்த சூழ்நி லையில் அவரது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை யும் கமல் ஏற்றுக்கொண்டுள்ளாராம். கமல் அரவணைப்பில் பொன்னம்பலம் பூரண குணமடைந்து திரும்பட்டும். வீடியோ கீழே…
Read More