June 27, 2026
  • June 27, 2026

நடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு

by on July 15, 2020 0

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (நடிகை மேக்னாராஜின் கணவர்) வின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அர்ஜுன் குடும்பத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.   அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு அதிர்ச்சி செய்து அவர்கள் குடும்பத்துக்குள்ளிருந்தே வந்துள்ளது.   சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   […]

Read More

பிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..?

by on July 15, 2020 0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என் டமோலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வம் இந்த முறை இல்லை என்பது தெரிய வந்ததால்தான் என்கிறார்கள். ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் மீண்டுமொரு பூட்டிய வீட்டிற்குள் 100 நாட்களுக்குள் இருப்பதா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாம். அதனால் பிக்பாஸ் சீசன் 4 யை இந்த […]

Read More

கொரோனா பரிசோதனையில் பலியான குழந்தை

by on July 15, 2020 0

சவுதி அரேபியாவில் அப்துல்லா அல் ஜவுபான் என்பவரது ஆண் குழந்தை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி மாதிரிகளை எடுக்கப் பயன்படும் குச்சியை குழந்தையின் மூக்கில் விடும்போது அது உடைந்துள்ளது.குச்சியை எடுக்க டாக்டர்கள் மயக்க மருந்து செலுத்தினர். ஆனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை […]

Read More

மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க முடியும்

by on July 14, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளதால் சாதாரண காய்ச்சலும் கூட கொரோனாவின் அறிகுறியாகவே கருதப்படுகிறது.   இந்நிலையில் காய்ச்சலுக்குப் பயன்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும் மருந்து சீட்டு இல்லாதவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாது எனவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன.    பல கடைகளில் மருந்துசிசிட்டு இல்லாமல் பாரசிட்டமால் கொடுக்கப்படுவதில்லை […]

Read More

என் புகார் என்ன ஆச்சு – போலீசிடம் வனிதா கேள்வி

by on July 14, 2020 0

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரைை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சூர்யா தேவி என்ற பெண் சமூக வலைத்தளத்தில் வனிதா விஜயகுமார் பற்றி அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 7ஆம் தேதி போரூர் காவல் நிலையத்தில் வனிதா விஜயகுமார் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அதுகுறித்து கேட்பதற்காக […]

Read More

சூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது

by on July 14, 2020 0

ஹாலிவுட் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கியாகிவிட்டது இதில் கோலிவுட் மட்டும் விதிவிலக்கா என்ன? வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ’நவரசா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 9 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர் என்றும், அதில் ஒரு எபிசோடை மணிரத்னம் இயக்கவுள்ளார் என்றும் தகவல். இந்த வெப்தொடர் மூலம் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குநராக அறிமுகமாக […]

Read More

கொரோனா பாதிப்பில் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் – இஸ்ரேல் சோகம்

by on July 13, 2020 0

இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து தனிமையால் வாடும் அந்நாட்டு மக்களிடம், மரங்களிடம் அன்பு செலுத்துமாறு அப்போலோனியா தேசிய பூங்கா ஊழியர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். அதன் விளைவால் அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர். ‘கொரோனா பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கட்டியைணைக்க முடியவில்லை. மரங்களை கட்டியணைப்பது மனதிற்கு […]

Read More

அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

by on July 12, 2020 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பலத்த […]

Read More
CLOSE
CLOSE