முக்கியப் பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறும் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. […]
Read Moreரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் திரு முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவான ‘தௌலத்’ திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதுபற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலியிடம் கேட்ட போது, ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத் திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் […]
Read Moreஇருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக எஸ்.பி.பி கடந்த 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் […]
Read Moreகொரோனா பாதிப்பில் இது நட்சத்திரங்களின் சீசன் போலிருக்கிறது இந்தியா முழுவதிலும் அனேக சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் நட்சத்திரங்களையும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்தவகையில் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி யையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தனது அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார். “கடந்த வாரம் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அது எனக்கு பாசிட்டிவ்வான ரிசல்ட தந்தது. மற்ற கொரோனா நோயாளிகளை போலவே எனக்கும் […]
Read Moreகீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், குட்லக் சகி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி காலை பத்து மணிக்கு […]
Read Moreகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமாகி வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்த டாக்டர் சேதுராமனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு பக்கம் நடிகராகவும் இன்னொரு பக்கம் மருத்துவத்துறையில் தோல் நிபுணராகவும் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கொரோனா ஊரடங்கு நேரத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். வெறும் 36 வயதில் நேர்ந்த அவரது மரணம் கோலிவுட்டில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அவரது மனைவி உமையாள் […]
Read Moreதமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அஇஅதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்து கூறிவருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், “இது அவரவர்களின் சொந்தக் கருத்து என்றும் கட்சியின் கருத்து அல்ல என்றும் கூறினார். எனினும், இது போன்று பொது வெளியில் கருத்துத் தெரிவிப்பது கட்சியைப் பலவீனப்படுத்தும் … ” என்றும் அவர் குறிப்பிட்டார். அஇஅதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலைச் சின்னம் என்ற மூன்று தாரக […]
Read More