June 29, 2026
  • June 29, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

மகாமுனி திரைப்பட விமர்சனம்

by on September 7, 2019 0

கடவுள், மிருகம் என்ற இரண்டு மனித நிலைகளையும் தனித்தனிப் பாத்திரங்களாக்கி இரண்டு நிலைகளும் இந்த சமூகத்தில் என்ன அனுபவத்துக்கு ஆட்படுகின்றன என்று ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். மிருக நிலைக்கு ‘மகா’ என் கிற வன்மம் மிகுந்த பாத்திரத்தில் ஒரு வேடமும், முனி என்கிற ஆன்மிகப் பாத்திரத்தில் இன்னொரு வேடமுமாக ஆர்யாவுக்குக் கொடுத்து இந்த ‘மகா’, ‘முனி’ இரண்டின் வழியாகவும் மனித வாழ்வின் அகம், புறம் தேடும் தத்துவார்த்தமான படைப்பாக அதைத் தந்துமிருக்கிறார். “எங்களுக்குத் தத்துவமெல்லாம் […]

Read More

பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார்

by on September 6, 2019 0

அஜித், விஜய், விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்டு தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 48.   ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’, ‘மேகமாய் வந்துபோகிறேன்…’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த கவிஞர்.முத்துவிஜயன். பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.   மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்துவிஜயன் இன்று மாலை […]

Read More

கவுண்டர் காமெடியை தலைப்பில் வைத்த சந்தானம்

by on September 6, 2019 0

சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘டிக்கிலோனா’. இந்த டிக்கிலோனா வார்த்தையை நினைவிருக்கிறதா..? நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் ‘ஜென்டில்மேன்’ படத்தில் பேசி ஒரு வரலாறையே ஏற்படுத்திய அதே பெயரை சந்தானம் படத்துக்கு வைத்திருக்கிறார்கள். பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்தவருமான ‘கார்த்திக் யோகி’ இப்படத்தை இயக்குகிறார். ‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் ‘சோல்ஜர் […]

Read More

கார்ப்பரேட் கம்பெனிகளால் கதை திருட்டு நடக்கிறது

by on September 6, 2019 0

படைப்பாளன் படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில்,  இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை. கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை. இடம் பொருள் ஏவல் என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக்கதைக்கு நான் தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று பத்துலட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். […]

Read More

எனை நோக்கிப் பாயும் தோட்டா டீம் முக்கிய அறிவிப்பு

by on September 5, 2019 0

பல முயற்சிகளுக்குப் பின் நாளை வெளியாகவிருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் இம்முறையும் ஏமாற்றி விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்த இந்தப் படம் நாளை வெளியாகாதது எல்லோருக்கும் ஏமாற்றமே. இந்நிலையில் வெளியீடு எப்போது என்பது குறித்து படத்தைத் தயாரித்திருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.  அந்த அறிவிப்பு கீழே…

Read More

விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா, ரெபா மோனிகா ஜான்

by on September 5, 2019 0

‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’  மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம் பதிக்கிறார். ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’,  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’,  உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள்  தலைமை இணை இயக்குனர் – நிர்வாக தயாரிப்பாளர் […]

Read More

லொஸ்லியாவை வைத்து சேரனின் மாஸ்டர் பிளான்

by on September 5, 2019 0

சமூகத்துக்குத் தேவையற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதில் சேரன் என்ற நல்ல இயக்குநரும் சிக்கினாரே என்ற கவலைதான் பல ஆரோக்கிய சிந்தனையாளர்களுக்கும். ஆனால், அவர் பட்ட கடன்களை அடைக்கவே அப்படி முடிவெடுத்தார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதிலிருந்து மதுமிதா வெளியே வந்தவுடனேயே அந்நிகழ்ச்சிக்கு எத்தனை லட்சங்கள் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது என்ற விஷயம் அதிகாரபூர்வமாகவே ஊர் உலகுக்குத் தெரிந்தது.  70 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் சேரனே பிக்பாஸ் படத்தை வென்றால் மிகப்பெரிய தொகை […]

Read More

பிக்பாஸில் கொடுமை மதுமிதா போலீஸில் திடீர் புகார்

by on September 4, 2019 0

பிக் பாஸ் 3 சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அத்துடன் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் ஒன்றை அளித்தது. அதில், மதுமிதா தனக்கு வர வேண்டிய பணத்தை உடனடியாக கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களை அழைத்த மதுமிதா, தன் மீது […]

Read More