April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • சூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் – பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு
March 19, 2020

சூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் – பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு

By 0 579 Views
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 970 பேரை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது.

இந்தியா முழுதும் இதுவரை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  

உலகம் முழுவதும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவம் மற்றும் அறிவியல் அறிஞர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கொரோனா கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பாராளுமன்ற வளாகத்தில்  இன்று செய்தியாளர்களிடம், ”மக்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சத்தில் நிற்கவேண்டும். சூரிய வெளிச்சம் ‘விட்டமின் டி’ ஊட்டச்சத்தை உருவாக்குகிறது. இந்த விட்டமின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் கொல்லும்..!’’ என்றார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது..!