April 26, 2024
  • April 26, 2024
Breaking News
March 26, 2020

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் 1 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு

By 0 529 Views

இந்தியாவில் 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

இது வரும் மாதங்களில் எவ்வாளவு அதிகரிக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது.

அதில், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்று கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் தாக்கியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த கணக்கீட்டை உருவாக்கி உள்ளனர்.

அந்த ஆய்வின்படி இந்தியா முழுவதும் 12 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். இந்த வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருக்கும் மே மாதம் 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்படக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நோய் தாக்கம் தொடர்பாக விரிவான அறிக்கையை அந்த அமைப்பிடம் இருந்து கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை துண்டிப்பது ஒட்டுமொத்த முடக்கத்தை விட நல்ல பலனை தரும் என்று கூறியுள்ளார்.

அறிக்கையின் ஆறுதலான செய்தி மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்துக் கொண்டால் நோய் தாக்குதல் 75 சதவீதம் வரை குறைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதுதான்.

எனவேதான் மக்கள் வெளியே நடமாடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும் என்பது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.