June 22, 2026
  • June 22, 2026
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா – செங்கல்பட்டில் 1000 குடும்பத்துக்கு கொரானா நிவாரணம்
April 8, 2020

பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா – செங்கல்பட்டில் 1000 குடும்பத்துக்கு கொரானா நிவாரணம்

By 0 952 Views

PMJKYPPA பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா பிரச்சார இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆலோசனையின்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமையில் வழங்கும் நிகழ்வு கேளம்பாக்கம் மாவட்ட அலுவலகத்தில் துவங்கப்பட்டது .

இதன் மூலம் கேளம்பாக்கம், புதுப்பாக்கம் சாவடி சிறுதாவூர் , மடத்தூர், திருப்போரூர் , பையனூர் , காரணை , தட்சிணாபுரம், குன்னபட்டு , வளர்குன்றம் அனுமந்தபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது

மேலும் சுமார் 100 கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் ஏற்படும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தங்கள் பகுதியில் கபசுர நீர் கொடுக்க விரும்பும் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.