July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 31, 2024

உழைப்பாளர் தினம் திரைப்பட விமர்சனம்

0 601 Views

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உலகத் தொழிலாளர்களுக்கு ஒரு உயரிய செய்தியைச் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றியது.  ஆனால் இதில் இயக்குனரும் நாயகனும் ஆன சந்தோஷ் நம்பிராஜன் சொல்லி இருப்பது வேலைக்காக வெளிநாடு செல்லும் உழைப்பாளிகளைப் பற்றிய கதை. அதிலும் நன்கு படித்து தொழிலுக்காகவோ, அல்லது உயர் பதவிகளுக்காகவோ வெளிநாடு செல்பவர்களைப் பற்றிய படம் இதுவல்ல. உள்நாட்டில் பிழைக்க வழி இல்லாமல் வெளிநாடுகளுக்கு சம்பாத்தியத்துக்காகச் சென்று தொழிலாளிகள் படும் இன்னல்களைப் பற்றிய கதை. இயக்குனராகவும், நாயகனாகவும், இந்தப் […]

Read More
August 31, 2024

விருந்து திரைப்பட விமர்சனம்

0 867 Views

சஸ்பென்ஸ் த்ரில்லர் போல ஆரம்பித்து சமூகத்துக்குச் செய்தி சொல்லி முடியும் படம். இதனை எல்லா கரம் மசாலாக்களும் சேர்த்து ஒரு கமர்சியல் விருந்தாக அளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன். தொழிலதிபர் முகேஷ், மர்ம மனிதர்களால் கடத்தப்படுகிறார். பின்னர் இறந்து போன அவரது சடலம் கிடைக்கிறது. தொடர்ந்து அவரது மனைவியும் விபத்தொன்றில் படுகொலை செய்யப்படுகிறார். இப்போது மீதம் இருப்பது அவர்களது மகள் நிக்கி கல்ராணி மட்டுமே. அவரையும் குறி வைக்கிறது அந்த மர்ம கும்பல்.  இன்னொரு பக்கம் […]

Read More
August 31, 2024

ஒரே நாள் இரவு இரண்டு கதாபாத்திரங்கள் – வித்தியாசமான ‘ பிளாக் !’

0 379 Views

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்.  மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் .  ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம்.  இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம்.  நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக […]

Read More
August 30, 2024

செம்பியன் மாதேவி திரைப்பட விமர்சனம்

0 501 Views

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு சாதியினரை காதலித்தால் அதை நாடக காதல் என்று வர்ணிக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை காதலிப்பதால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனுக்கு நேர்ந்த கதி என்ன என்று சொல்லும் படம் இது. சாதி மாற்றுக் காதலால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட, அவரது தங்கையும், நாயகியுமான அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார். வழக்கம்போல் ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு […]

Read More
August 29, 2024

கடந்த வருடங்களில் தமிழ் சினிமா வேறொரு இடத்துக்குச் சென்று விட்டது – பரத்

0 272 Views

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் […]

Read More
August 28, 2024

பராரி படத்துக்குப் பிறகு சினிமாவில் சாதிப் படம் எடுப்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள்..!

0 380 Views

இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பராரி’. இந்த சொல் தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிப்பது. இந்தப்படம் திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான அரசியலையும் ‘பராரி’ பேசுகிறதாம். இதில் தோழர் வெங்கடேசன் படத்தில் நடித்த ஹரிசங்கர் பராரி திரைப்படத்தின் நாயகனாக நடிக்க, புதுமுக நடிகையான சங்கீதா கல்யாண் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். […]

Read More
August 23, 2024

வாழை திரைப்பட விமர்சனம்

0 711 Views

விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப் பொருள்கள் வரை அவற்றின் முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  இந்த அவலமான உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவமாகவே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கண்ணீர் காவியமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.  வாழைத் தோட்டத்தில் காய் சுமக்கும் கூலி வேலைக்கு போகும் மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறார் அவர்.  படத்தின் நாயகன் பதின் பருவம்தொட்ட பதின்மூன்று வயது பொன்வேல்தான். அவனது வாழ்வின் ஒரு பகுதிதான் கதையாகக் காட்டப்படுகிறது.  பள்ளியில் […]

Read More