June 22, 2026
  • June 22, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

ரஜினியின் அறிவிப்பு ஜோதிடர் ஷெல்வி தொழிலுக்கு ஆப்பு – வீடியோ

by by Dec 30, 2020 0

தற்போது தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி, டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்..!

இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சி…

Read More

பழிதீர்த்த பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் – மனமுடைந்த இசை ஞானி

by by Dec 28, 2020 0

ஏறத்தாழ 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவின்  பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரைத்தான் இசையமைக்க பயன்படுத்தி வந்தார் இளையராஜா.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற நேர்ந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த இளையராஜா, தான் 35 ஆண்டுகளாகப் பயன்படுத்திய அறையில் ஒரு மணி நேரம் தியானம் செய்யவும், அங்கேயிருக்கும் தன்னுடைய பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லவும் பிரசாத் நிர்வாகம் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்…

Read More

குப்பை கொட்ட கட்டணம் திட்டம் நிறுத்தி வைப்பு

by by Dec 24, 2020 0

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப் படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 படி பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வீடுகள், வணிக…

Read More

கைலாசாவுக்கு 3 நாள் இலவச விசா உணவு தங்குமிடம் – நித்தி அழைக்கிறார்

by by Dec 17, 2020 0

கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

“கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம்.

மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும்வரை உணவு தங்குமிட வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும்.

வருகை தரக்கூடிய நபர்கள் தங்களின்…

Read More

ரஜினி கமலின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக கிண்டலடித்த ரோஜா வீடியோ

by by Dec 11, 2020 0

Read More

அண்ணா பல்கலை சூரப்பா மீதான விசாரணைக்கு கமல் எதிர்ப்பு வீடியோ

by by Dec 5, 2020 0

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான வீடியோ கீழே…

Read More

பாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை

by by Nov 30, 2020 0

பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராக அறியப்படும் மருத்துவர் சீதள் ஆம்தே கராஜ்கி தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூரில் அமைந்துள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் திங்கள்கிழமை காலை அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் இன்று காலை, தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக வரோரா காவல்நிலைய அதிகாரி பி. பென்டார்கர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்….

Read More

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

by by Nov 25, 2020 0

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா. இவர் 1986 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மிகவும் துணை புரிந்தார். அதன் மூலம் உலகப் புகழையும் பெற்றார்.

எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மதிக்கப்படும் மாரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அவர்.

இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

மாரடோனாவுக்கு வயது 60. பல முக்கிய உயிர்களை பலி வாங்கிய…

Read More

சென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…

by by Nov 24, 2020 0

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு…

Read More

தமிழக காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை வருகிறது

by by Nov 19, 2020 0

அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது.   
 
இதனை தொடர்ந்து மற்ற மாவட்ட பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.
 
குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள்…

Read More