பாகுபலி படத்தின் மூலம் உலகத்தில் புகழின் உச்சம் தொட்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இன்று பதிவிட்டுள்ள டுவீட்டில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அந்த ட்விட்டர் செய்தியில் ” எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் இருந்தது. நாங்கள் அனைவரும் கோவிட் டெஸ்ட் செய்து கொண்டோம். எதுவும் இருக்காது என்றுதான் நினைத்தோம். ஆனால் மெலிதாக கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நாங்கள் குடும்பத்துடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி முறையான மருந்துகள் எடுத்துக்…
Read Moreஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த நில மோசடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சாமானியர்கள் பாதிக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இப்போதோ பிரபலங்கள் பலர் ரியல்…
Read Moreதலைப்பைப் பார்த்துவிட்டு நம்ம தமிழ் ஹீரோ யாரோ ஒருவர்தான் இப்படி வாங்கி கொடுத்து விட்டாரோ என்று ஆச்சரியப்பட வேண்டாம். தமிழ் ஹீரோக்கள் சினிமாவில் தாராளம் செய்வதோடு சரி. நிஜ வாழ்க்கையில் செய்வதறியாதவர்கள்.
இந்த ஹீரோ இந்தி நடிகரான சோனு சூட். கொரோனா பிரச்சனையில் புலம் பெயர்ந்த…
Read Moreசிறிது காலமாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி அவதூறு சொல்லி நிறைய வீடியோக்களை பகிர்ந்து உள்ளார் நடிகை விஜயலட்சுமி.
அதில் அவர் கூறிய பகிரங்கமான குற்றச்சாட்டை சீமானும் அவர் ஆதரவாளர்களும் தன்னை வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆகும்.
இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இதுவே தனது கடைசி வீடியோ எனவும் ஏற்கனவே இரண்டு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற அவரை…
Read Moreஎன்னதான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கினாலும் சரி. இந்திய சினிமா உலகின் அரசியலில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அமைந்திருக்கிறது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் கூறியிருக்கும் பகீர் குற்றச்சாட்டு.
மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:-
“பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க…
Read Moreநடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம்.
விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து ணமடைந்துள்ளார்.
இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதனை அவரே தன் டிவிட்டர் பக்கத்தில் உ றுதி ப் படுத்தியிருக்கிறார்.
Read More