தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 234
ரீ சார்ஜ் செய்யா விட்டாலும் ஏப்ரல் 17 வரை இணைப்பு துண்டிக்கப் படாது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை உள்ளது.
ஆன்லைன் வசதி இல்லாத ஃபியூச்சர் போன்களில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலைமையை கணக்கில் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என்றும் அது மட்டுமன்றி ரூபாய் 10 அவர்களுக்காக ரீசார்ஜ் செய்யப்படும்…
Read More
யூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை
சமூக வலைத்தளங்கள் ஏற்கனவே பாதி பேரை அதற்கு அடிமையாக மாற்றி வைத்திருந்தது! போதாக்குறைக்கு இந்த “கொரோனா” இருப்பவர்களையும் அவ்வாறு மாற்றாமல் போகாது போலிருக்கிறது! மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையால் மக்களின் மனநிலை நெருக்கடிக்குள்ளாகி இருப்பதை கவனிக்கிறேன். எவை எவற்றை வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என சிந்திக்கும் நிலையை பலர் இழந்து விட்டதை காணமுடிகிறது.
ஏற்கனவே இந்த யூடியூப் வரவால் பல திடீர் மருத்துவர்கள் உருவாகியிருந்தார்கள்! இப்பொழுது அப்படிபட்ட மருத்துவர்கள் மட்டுமே யூடியூப் எங்கும் நிரம்பிக் கிடக்கிறார்கள்….
Read More
நாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு
மக்களின் கோரிக்கையை ஏற்று பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு அறிவிப்பு.
ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது.
அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பானபோது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருந்தது. அத்தனைபேரும் ராமாயணம் பார்க்க வீடுகளில் முடங்கினார்கள்.
ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் சீதையாக தீபிகா…
Read More
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் 1 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு
இந்தியாவில் 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.
இது வரும் மாதங்களில் எவ்வாளவு அதிகரிக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது.
அதில், வருகிற…
Read More
கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்
வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை விட கொரோனா பற்றிய அச்சமும் பீதியும் அந்த நோய் பற்றிய தேவையில்லாத வதந்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன.
கொரோனாவால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது +41 798931892 என்ற எண்ணில் அஃபிஷியல் பிசினஸ் அக்கவுண்டில், வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி இந்த நம்பரை பொதுமக்களிடையே பகிர்ந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும், செல்போனை பயன்படுத்தும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் யாராக இருந்தாலும்,…
Read More
வைரல் ஆகும் ரஜினி – பியர் கிரில்ஸ் மேன் வெர்சஸ் வைல்ட் வீடியோ
சிக்கன் முட்டை சாப்பிட்டு கொரோனா வந்ததை நிரூபித்தால் 1 கோடி பரிசு
நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா விளைவு – சினிமா சந்திக்கும் பாதிப்புகள் மீள வழிகள் வீடியோ
கொரோனா பீதியால் உலகெங்கும் பல தொழில்கள், ஸ்டாக் மார்க்கெட், வர்த்தகம் எல்லாமே தற்காலிகமாக முடங்கிப் போயிருக்க, இதில் சினிமாத் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதில் இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா சந்திக்கும் பாதிப்புகள் எத்தகையவை… அதிலிருந்து மீளவும், இழந்த வசூலை மீட்கும் வழிமுறைகள் பற்றியும் இங்கே விரிவாக எடுத்துரைக்கிறார் பிரபல படத்தயாரிப்பாளரும், சினிமா ஆய்வாளர் மற்றும் ஆர்வலருமான ஜி.தனஞ்செயன்.
அருமையான இந்த வீடியோவை முழுதும் பாருங்கள்…
Read More
திரௌபதி படத்துக்கு எதிராக மறியல் போலீஸ் குவிப்பு
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொம்மிடி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து, திரெளபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக புகாா் தெரிவித்து, திரையரங்கு வளாகத்தை சிலா் முற்றுகையிட்டனா். தொடா்ந்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
அப்போது, திரையரங்கம் எதிரே பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திரையரங்கு…
Read More