April 19, 2024
  • April 19, 2024
Breaking News
March 31, 2020

ரீ சார்ஜ் செய்யா விட்டாலும் ஏப்ரல் 17 வரை இணைப்பு துண்டிக்கப் படாது

By 0 639 Views

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஆன்லைன் வசதி இல்லாத ஃபியூச்சர் போன்களில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலைமையை கணக்கில் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என்றும் அது மட்டுமன்றி ரூபாய் 10 அவர்களுக்காக ரீசார்ஜ் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

அதேபோன்ற அறிவிப்பை ஏர்டெல் நிறுவனமும் அறிவித்தது என்பதும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என்றும் ஏர்டெல் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ரீசார்ஜ் செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து தற்போது மற்றொரு தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் அறிவிப்பின்படி இன்டர்நெட் வசதி இல்லாத ஃபியூச்சர் போன்களுக்கு ரூபாய் 10 ரீசார்ஜ் செய்யப்படும் என்றும் மேலும் ஏப்ரல்17ஆம் தேதி வரை காலத்தை நீட்டிப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

கிட்டத்தட்ட மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரே மாதிரியான அறிவிப்பை செய்துள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இன்கமிங் சேவை தொடரும் என்பதும் அவர்களுக்கு கிடைக்கும் 10 ரூபா ரீசார்ஜ் மூலம் அவசர காலத்தில் போன் பேசிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது