இந்தியாவின் பிரமாண்டப் படமாகக் கூறப்படும் 2.ஓ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப் பட்டது.
இந்தப் படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தாலும் உலகிலேயே முதல்முறையாக 4டி எஸ் எல் ஆர் என்ற புதிய ஒலி நுட்பத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதுபற்றி ஷங்கர் கூறும்போது….
“3டி ஒலிநுட்பம் இடம் வலம் மேலே ஒலி கேட்கும் அளவில் இருக்கும். 4டி என்பது கால்களுக்கு கீழும் ஒலி கேட்கும். இதைத் தமிழ் படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கனவு இருந்தது. அது இதில் நிறைவேறியது.
இந்த…
Read More
‘மூடர் கூடம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் வித்தியாச இடத்தைப் பிடித்த இயக்குநர் நவீன் இயக்கத்தில் ‘விஜய் ஆண்டனி’யின் அடுத்த படம் அமைகிறது. அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் இடையே மிகப் பிரபலமான ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து இருக்கும் நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் 23ஆவது திரைப் படம் இது.
இவர்களுடன் மிக…
Read More
சர்கார் கதை ஏற்படுத்திய பரபரப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி முடிவுகள் அவர் மீதான நன்மதிப்பை உயர்த்தின. கதைக்கு சொந்தம் கொண்டாடிய வருண் ராஜேந்திரன் நீதி மன்றத்தை அணுகி சாதகமான சமரசத்துக்கு வர, பாக்யராஜின் உறுதிதான் மூலகாரணமாக இருந்தது.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவர் பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ். நான் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாமல் நேரடியாக தலைவர் பதவிக்கு வந்தவன். நேரடியாக…
Read More
ஏ.ஆர்.முருகதாஸும் இன்றைக்கு செய்திகளை உருவாக்குபவர் ஆகிவிட்டார். அவர் நின்றாலும் செய்தி… நடந்தாலும் செய்தி என்று ஆகிவிட்ட நிலையில் நேற்று அவர் காஞ்சி காமாட்சி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்தார்.
அதன் காரணமாகக் கூறப்படுவது ‘சர்கார்’ படத்தின் வெற்றிக்காக என்றுதான். ஆனால், ‘சர்கார்’ கதைப் பிரச்சினை சாதகமாக அமைய வேண்டிக் கொண்டதன் அடிப்படையிலும் அவர் கோவிலுக்கு வந்ததாக ஒரு வட்டாரம் செய்தி சொல்கிறது.
ஒவ்வொரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை மூலதனமாக்கி தியேட்டர்காரர்கள் டிக்கெட்டின் விலையைக் கணிசமாக உயர்த்தி அநியாய லாபம் பார்த்துவிடுகிறார்கள்.
ரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் ஆதர்ச ஹீரோவின் படத்தை முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடத் துடிக்கிறார்கள்.
இப்போது தீபாவளி ரிலீசாக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ வெளியாகும் நிலையில், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க…
Read More
இது காப்பியடித்த கதைகளுக்கு காப்புரிமை கோரும் சீசன். ‘சர்கார்’ கதை சமரசத்துக்கு வந்த நேரத்தில் ’96’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். பாரதிராஜாவும் அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.
இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர்…
Read More
படத்தின் தலைப்பையும், இதற்கான புகைப்படங்களையும் பார்த்துவிட்டு “இந்தப்படத்துக்கெல்லாம் விமர்சனம் அவசியமா..?” என்ற கேள்வி எழலாம். படம் பார்க்கும்வரை அதே நினைப்புதான் இருந்தது. ஆனால், பார்த்து முடித்தவுடன் ஏற்பட்ட விளைவு வேறு… மேலே படியுங்கள்..!
படம் எப்படிப்பட்டது என்று தலைப்பிலேயே ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு…’ என்று வீச்சரிவாள் வீசியதைப் போல சொல்லி விட்டார் இயக்குநர் ‘நாகா’ என்கிற நாகராஜ். (நாகா என்ற பெயரிலும் நாகராஜ் (தினந்தோறும்) என்ற பெயரிலும் ஏற்கனவே இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் வேறு……
Read More
‘அக்கூஸ் புரொடக்ஷன்’ சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்து ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’ .
இப்படத்தின் பாடல்களை நடிகர் – இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் , கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது
“இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.
இன்று ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ‘மீ டூ’ என்பது இரண்டு…
Read More