சமீப கால வெளியீடுகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அதற்குக் காரணம் படம் நன்றாக இருந்தது மட்டுமன்றி அதற்கான புரமோஷன் அற்புதமாக அமைந்ததும்தான்.
அசோக் செல்வன் ஹீரோவாகவும், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்திருந்த படம் நேர்த்தியான முறையில் யார் மனதும் புண்படாதவாறு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அவர்களை அறியாமல் ஒருவரின் மனது புண்பட்டிருக்கிறது.
படத்தில் வாணிபோஜன் பயன்படுத்தும் எண்ணாக ஒரு எண் சொல்லப்படுகிறது. உண்மையில் அது சென்னையில் ரியல் எஸ்டேட்…
Read More
தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார்.
படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு…
Read More
எல்.சி. நீரஜா பிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர்.
ஆதிப், ஹமரா, சி.வி, கு.கார்த்திக் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாஸ்கோ எடிட்டிங் செய்ய, சாய் பாரதி நடனம் அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ்,…
Read More
கதை திரைக்கதை எழுதிவிட்டு படமாக்குவது சினிமா வாடிக்கை. ஆனால், இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கிவிட்டு அதற்கு ஒரு கதை எழுதினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
படத்தின் தொடக்கக் காட்சி விறுவிறுப்பாகவே இருக்கிறது, அத்துடன் ஆரோக்கியமான சமூகப் பிரச்சினையுடன் தொடங்குகிறது. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை கட்ட கார்ப்பரேட் கம்பெனி ஒன்று முயல, அதைக் கண்டுபிடித்துவிடும் சமூக ஆர்வலர் கஸ்தூரி, அதற்கான ஆதாரங்களை சேகரிக்கிறார். அதனாலேயே கொலையாகிறார். ஆனால், சமயோசிதமாக அதை பத்திரிகையாளர் வரலஷ்மி வசம் சொல்லிவிட்டுச்…
Read More
தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகை காவேரி ‘சமுத்திரம்’, ‘காசி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழுக்கும் நன்கு அறியப்பட்டவர். கல்யாணி என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் துறையையும் மாற்றிக்கொண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி விட்டார். அது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதம்…
ஊடகத் துறையினர் அனைவருக்கும்
எனது அன்பான வணக்கங்கள்…
நான் நடிகை காவேரி (எ) கல்யாணி. இதுவரை எனக்கு அன்பும் பேராதரவும் அளித்து கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், சக நடிக-நடிகையர்,…
Read More
அமெரிக்க வேர்ல்ட் டமில் யுனிவர்சிட்டி தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அது போலியான பட்டம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
முனைவர் பட்டம் பெற பி.எச்.டி படிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சாதனையை பாராட்டி அந்த பட்டத்தை வழங்க வேண்டும்.
குஷ்புவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முனைவர் பட்டம் ஒரு அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழத்தினுடையது என்று அந்த பல்கலைக்கழகத்தின் வலைதளத்திலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
அரசால் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட முனைவர் பட்டத்திற்கு இத்தனை அலப்பறை தேவைதானா…
Read More
தனுஷின் 40வது படம் ஜகமே தந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவருடைய 41வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கு வதும் அது கர்ணன் என்றும் எல்லோருக்கும் தெரியும்.
இந் நிலையில் தனுஷின் 42வது திரைப்படம் ஹிந்தி திரைப்படம். 43வது படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளது, ஜிவி இசையமைப்பதும் தெரியும்.
44வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் தனுஷின் 45வது திரைப்படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளாராம். 46வது திரைப்படம்…
Read More
குறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த்.
ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது என்று அறிகிறோம்.
இந்தப்படத்தில் இன்றைய ஐடி இளைஞர்களுக்கு வழக்கமாக இருக்கும் வேலைச்சுமையையும், அதிகாரிகளின் கெடுபிடியையும் முன்னிறுத்தி சொந்தத் தொழில் தொடங்கும் போக்கை முன்னிறுத்துகிறார் அவர். அப்படி ஹீரோக்களான ராம்குமார் சுதர்ஷனும்,…
Read More