April 19, 2024
  • April 19, 2024
Breaking News
March 9, 2020

இயக்குனர் ஆன நடிகை காவேரியின் கடிதம்

By 0 978 Views

தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகை காவேரி ‘சமுத்திரம்’, ‘காசி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழுக்கும் நன்கு அறியப்பட்டவர். கல்யாணி என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் துறையையும் மாற்றிக்கொண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி விட்டார். அது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதம்… 

ஊடகத் துறையினர் அனைவருக்கும்
எனது அன்பான வணக்கங்கள்…

நான் நடிகை காவேரி (எ) கல்யாணி. இதுவரை எனக்கு அன்பும் பேராதரவும் அளித்து கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், சக நடிக-நடிகையர், ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள், நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும், இத்தருணத்தில் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘K2K புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குனர்-தயாரிப்பாளராக நான் அடியெடுத்துவைக்கும் இந்த புதிய முயற்சிக்கும் உங்களது அன்பும் ஆதரவும் நல்குமாறு வேண்டுகிறேன்.

Actress Kaveri Turns Director

Actress Kaveri Turns Director

‘K2K புரொடக்ஷன்ஸ்’ சார்பாக எங்களது முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை முன்னணி திரைப்பட இயக்குனர் திரு. கெளதம் வாசுதேவ் மேனன், எதிர்வரும் ஹோலி பண்டிகை நாளான 09 பிப்ரவரி 2020 அன்று, காலை 10.05 மணிக்கு வெளியிடுகிறார் என்பதை தெரிவித்து மகிழ்கிறோம். மிக்க நன்றி.

என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,

காவேரி கல்யாணி