வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ என்னும் பட்டப்பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது .
நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 1ல் வெளியாவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இந்த திரைப்படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் உடன் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
ஆன்லைனில் ரிலீசான இரண்டு…
Read Moreகடந்த ஆண்டு கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் நன்கு பரிச்சயமானார் சாண்டி.
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி தற்போது நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குழந்தையாக தோன்றியிருக்கும் சாண்டி மாஸ்டர் கவின், முகென், தர்ஷனிடம் போர் அடிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ பதிவைப் பார்த்த தர்ஷன், முகென், நடிகர் மகத் உள்ளிட்டோர் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்…
Read More
தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை ‘ ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் விரைவில் துவங்குகிறது.
வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம்.
நேரடி திரைப்படங்கள், ஒரிஜினல் கதையம்சமுள்ள…
Read Moreஇயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார்.
அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி அடங்கியது.
சரி……
Read Moreஇளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது.
அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம்.
பாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த வீடு, நினைவு இல்லமாக…
Read More