சில தினங்களுக்கு முன் வெளிவரவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் தன் கட்டவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இது குறித்து பால் முகவர்கள் கொதித்துப் போனதுடன், பாலுக்கு போலீஸ் பாதுகாப்பும் கேட்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்படதென்று அதற்கு மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். இதுகுறித்து பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக அதன் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள […]
Read Moreசமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார். அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே நடித்து அது தொடர்பான வசனங்களையே பேசிக்கோண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்போதைய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு […]
Read Moreஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது. மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் கலைப்புலி எஸ் .தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு […]
Read Moreதன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி பெற்று வரும் ‘ஹிப்ஹாப்’ ஆதி, அவரே நடித்துக் கொண்டிருக்கும் ‘நட்பே துணை’ படத்தில் சமீபத்தில் வெளியிட்ட ‘கேரளா சாங்’ பாடல் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். ‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறராம் ‘ஹிப்ஹாப்’ ஆதி. ‘நட்பே துணை’ […]
Read Moreகுறும்படத் தலைப்பே ‘ஒரு மயிரும் இல்ல’தான். ஆனால், டென்ஷனாக வேண்டாம். படமே தலை மயிர் பிரச்சினை பற்றிதான். இப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஒளிப்பதி வு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று நண்பர்கள்… நலம் விரும்பிகளே தொழில்நுட்பத் துணைகளாகி உழைத்துள்ளனர். நாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, […]
Read More17 வருடங்களுக்கு முன் இந்தக் காமெடிப்படம் வந்தபோது இதன் இரண்டாவது பாகம் எடுப்போம் என்று அவர்களுக்கே கூட தெரியாது. அதே பிரபு, அதே பிரபுதேவா, அதே இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூட்டணி அமைத்து இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். என்ன ஒன்று, கால மாற்றம் பிரபுதேவாவை மட்டும் ஹீரோவாகவும், முந்னதில் அவரது நண்பராக வந்த பிரபுவை இதில் அவரது மாமனாராகவும் மாற்றியிருக்கிறது. அதேபோல் அதில் பிரபு ஒரு பொய் சொல்லப்போக, படம்முழுதும் பிரபுதேவா மாட்டிக்கொண்டு முழிப்பார். இதிலும் அதே […]
Read More