“செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி […]
Read Moreஅரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால்தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும். இதை வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார். அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். பழைய […]
Read Moreஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக […]
Read Moreஇந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடக்கும் ஷங்கர் – ரஜினி – அக்க்ஷய் குமார் காம்பினேஷனில் உருவாகும் 2.ஓ படத்தின் முதல் பார்வை மற்றும் டீஸர் இந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்து டிரென்டிங்கில் கலக்கியது. இந்நிலையில் படத்தின் டிரைலரைப் பார்க்க அத்தனைபேரும் ஆவலாகக் காத்திருக்கும் நிலையில் அதற்கான முன்னறிவிப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அதன்படி நவம்பர் 3-ம்தேதி படத்தின் டிரைலர் அதிரடியாகக் களமிறங்கவிருக்கிறது. படத்தில் ஹீரோவைவிட அதிக முக்கியத்துவம் (பறவை வடிவ) வில்லனுக்கே என்பது இதுவரை வந்த […]
Read More“இந்த உலகத்தில் யாரும் புத்தனாக வாழ்ந்துவிட முடியாது. உலகில் உள்ள அத்தனை பேரும் யாருக்காவது துரோகம் செய்துவிட்டுத்தான் வாழ்ந்தாக வேண்டும் என்றுதான் உலக அமைப்பியல் இருக்கிறது. இதைத்தான் இந்தப் படத்தில் நான் சொல்லியிருக்கிறேன்.!” என்கிறார் ‘வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்’ தயாரித்திருக்கும் ‘எவனும் புத்தனில்லை’ பட இயக்குநர் எஸ்.விஜயசேகரன். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில்தான் அவர் இவ்வாறு பேசினார். இயக்குநர் எஸ்.விஜயசேகரனின் திரையுலக ஆசான்களான ஆர்.வி.உதயகுமார் போஸ்டரை வெளியிட இயக்குநர் தளபதி அதனைப் பெற்றுக் […]
Read Moreஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த ‘விஸ்மயா’ (தமிழில் நிபுணன்) படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன் கதாநாயகியாக நடித்தார். படப்பிடிப்பின் போது அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘மீ டூ’ தொடர்பாக பாலியல் புகார் கூறினார். அந்தப் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் தான் திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் […]
Read Moreசினிமாவைப் பொறுத்தளவில் எல்லாமே ஹீரோதான் என்ற நிலைதான் இன்றும், அன்றும். ‘அப்படி இல்லை’ என்பதை அந்த ஹீரோவே சொன்னால்தான் உண்டு. ஆனால், அவர்களும் அப்படிச் சொல்லாமல் எல்லாப்புகழையும் தாங்களே அறுவடை செய்துகொண்டு போகிறார்கள். இவர்களுள் வித்தியாசமான ஹீரோ விஜய் ஆண்டனி. அவரே நடித்து இசைமைத்திருக்கும் படமான ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் “இயக்குநர்தான் ஒரு படத்தின் ஹீரோ…” என்று சொல்லியதுடன் நிற்காமல் படத்தின் இயக்குநர் கணேஷாவுக்கு ஆளுயர மாலை ஒன்றை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினார். விஜய் […]
Read More‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று காற்று வழியே செய்தி வந்திருக்கிறது. அவர் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருக்கும் இரண்டு காட்சிகளுமே அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறதாம். அப்படி என்ன காட்சி..? படத்தில் வானொலி அறிவிப்பாளராக (RJ) நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் […]
Read More