April 27, 2024
  • April 27, 2024
Breaking News

Monthly Archives: September 2018

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம்

by on September 28, 2018 0

மின்விசிறிக் காற்றுக்கும், பதனம் செய்யப்பட்ட குளிருக்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் உடல் கூட ஜன்னலோரம் எப்போதோ வீசும் இயற்கைக் காற்று பட்டதும் சிலிர்க்கிறது அல்லவா..? வெள்ளித்திரையிலும் அதுபோன்ற ஒரு அனுபவம் எப்போதாவதுதான் நேரும். அப்படியான ஒரு சிலிர்ப்புதான் இந்தப்படம். ஆதிக்க மனிதர்களின் சுயநல வக்கிரத்தால் பின்தங்கிவிட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் கல்வி, காதல், தேடல், வழிகாட்டல் என்று வாழ்வின் சகல தேவைகளுக்கும் எப்படிப் போராட நேர்கிறது என்கிற ஒற்றைக் கோடுதான் கதையின் ஒற்றை வரியும். […]

Read More

நோட்டா வுக்காக மரண வெயிட்டிங் – விஜய் தேவரகொண்டா

by on September 28, 2018 0

ஆந்திரப் படவுலகமும், ஆந்திர திரைப்பட ரசிகர்களும் இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா போகும்வழியில் மண்ணெடுத்து பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்கின்றன ஆந்திர மீடியாக்கள். அப்படிப்பட்ட அவரை நேருக்கு நேர் அருகாமையில் நேற்று சென்னையில் நடந்த ‘நோட்டா’ பத்திரிகையாளர் சந்திப்பில் காண முடிந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘நோட்டா.’ விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக […]

Read More

விஷால் தனுஷுடன் மோதத் தயாராகும் விவேக்

by on September 27, 2018 0

‘வையம் மீடியாஸ்’ சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எழுமின்’. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார்.   அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.    முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் […]

Read More

பூமராங் படத்தை அனைத்து வயதினரும் ரசிக்க யு சான்றிதழ்

by on September 27, 2018 0

‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக படத்தைத் தயாரித்தும் இயக்கியும் இருக்கும் ஆர். கண்ணன். “ஒரு நல்ல கதையை வைத்துக் கொண்டு, ரசிகர்களின் ரசனையோடு ஒன்றிணைந்து அனைத்து வயதினரும் ரசிக்கும் படத்தை கொடுப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக நான் அதுதான் இன்றைய தேவை என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்… சில சமயங்களில் அனைத்து ரசிகர்களுக்கும் சென்று சேர வேண்டிய கதை, ‘யு/ஏ’ சான்றிதழால் […]

Read More

சொன்னதைச் செய்து விவசாயிகளை மகிழ்வித்த விஷால்

by on September 27, 2018 0

தன் நடிப்புலக பயணத்தில் 25 வது படத்தை விஷால் தொட்டுள்ள திரைப்படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் ‘விஷால் 25’ என்ற பிரமாண்ட விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால் , இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தன் படங்களின் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று விஷால் கூறியிருந்தார். அதன்படி ‘விஷால் […]

Read More

ராட்சசன் ஓடலைன்னா அடுத்த படம் நடித்துக் கொடுக்கிறேன்- விஷ்ணு விஷால்

by on September 26, 2018 0

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் படத்தைப் பற்றி விஷ்ணு விஷால் கூறியதிலிருந்து… “முண்டாசுப்பட்டி’ படத்தின்போதே, இயக்குனர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் “கதை […]

Read More

தினகரனுக்கு வேலை செய்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்சினைகள் – விஜயபாஸ்கர்

by on September 26, 2018 0

“இலங்கை இறுதி கட்டப் போரில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவிக்க அப்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியாயிருந்த மத்திய அரசு உதவி செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவே தெரிவித்துள்ளார். எனவே ஐ.நா.சபை தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்…!” என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். மேலும் அவர் பேசியதிலிருந்து… […]

Read More

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018

by on September 26, 2018 0

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய ‘மகளிர் ஆளுமை விருதுகள் 2018’ பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.   விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் ‘திரௌபதி முர்மு’ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.   விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய […]

Read More